பிரிட்டன் நாட்டின் பிரதமராகப் பல போராட்டங்கள், போட்டிக்கு மத்தியில் லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டார். பிரதமராகப் பதவியேற்றிய நாளில் இருந்து பல சவால்கள் எதிர்கொண்டு இருக்கும் லிஸ் டிரஸ் தற்போது முக்கியமான முடிவை எடுத்துள்ளார்.
ஒருபக்கம் பணவீக்கத்தின் உயர்வால் அந்நாட்டின் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாணயத்தின் மதிப்பு சரிவைச் சந்தித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் மத்திய வங்கி வட்டியை உயர்த்தி வரும் நிலையில் வர்த்தக வளர்ச்சிக்கான முக்கிய முடிவை லிஸ் டிரஸ் எடுக்க உள்ளார்.
இந்த முடிவு இந்தியர்களுக்குச் சாதகமாக அமைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
பிரிட்டன்
பிரிட்டன் நாட்டின் பல்வேறு வர்த்தகத் துறையில் ஆட்கள் பற்றாக்குறை அதிகமாக இருக்கும் காரணத்தில் வர்த்தகம் விரிவாக்கம் செய்ய முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கிறது. இதைச் சரி செய்யும் வகையில் முக்கிய முடிவை எடுக்க உள்ளது லிஸ் டிரஸ் தலைமையிலான குழு.
ஊழியர்கள் பற்றாக்குறை
பிரிட்டன் நாட்டில் நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க அந்நாட்டின் விசா சிஸ்டத்தில் முக்கியமான மாற்றத்தைச் செய்ய ஆய்வு செய்ய லிஸ் டிரஸ் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
லிஸ் டிரஸ்
லிஸ் டிரஸ் anti-immigration ஆதரவாக இருக்கும் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாக இந்த முடிவை எடுக்க உள்ளார். குறிப்பாக "shortage occupation list" பட்டியலில் பலமாற்றங்களைச் செய்வதன் மூலம் பல துறைகளில் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை நியமிக்க முடியும்.
ஆங்கிலம் விதிமுறைகள்
இதைவிட முக்கியமான சில துறையில் அதிகப்படியான தொழிலாளர்களை ஈர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் காரணத்தால் ஆங்கிலம் பேச வேண்டும் என்ற விதிமுறைகளிலும் தளர்வுகளைக் கொண்டு வர ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
ப்ளூ காலர் வேலைவாய்ப்புகள்
இந்த விதிமுறை தளர்வுகள் ப்ளூ காலர் வேலைவாய்ப்புகளில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்குச் செல்வோர் இனி பிரிட்டன் நாட்டிற்குச் செல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வொயிட் காலர் வேலைவாய்ப்புகளுக்கு இந்தி விதிமுறை தளர்வால் பெரிய அளவிலான நன்மை கிடைக்காது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications