பிரிட்டன் நாட்டின் பிரதமராகப் பல போராட்டங்கள், போட்டிக்கு மத்தியில் லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டார். பிரதமராகப் பதவியேற்றிய நாளில் இருந்து பல சவால்கள் எதிர்கொண்டு இருக்கும் லிஸ் டிரஸ் தற்போது முக்கியமான முடிவை எடுத்துள்ளார்.
ஒருபக்கம் பணவீக்கத்தின் உயர்வால் அந்நாட்டின் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாணயத்தின் மதிப்பு சரிவைச் சந்தித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் மத்திய வங்கி வட்டியை உயர்த்தி வரும் நிலையில் வர்த்தக வளர்ச்சிக்கான முக்கிய முடிவை லிஸ் டிரஸ் எடுக்க உள்ளார்.
இந்த முடிவு இந்தியர்களுக்குச் சாதகமாக அமைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
பிரிட்டன்
பிரிட்டன் நாட்டின் பல்வேறு வர்த்தகத் துறையில் ஆட்கள் பற்றாக்குறை அதிகமாக இருக்கும் காரணத்தில் வர்த்தகம் விரிவாக்கம் செய்ய முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கிறது. இதைச் சரி செய்யும் வகையில் முக்கிய முடிவை எடுக்க உள்ளது லிஸ் டிரஸ் தலைமையிலான குழு.
ஊழியர்கள் பற்றாக்குறை
பிரிட்டன் நாட்டில் நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க அந்நாட்டின் விசா சிஸ்டத்தில் முக்கியமான மாற்றத்தைச் செய்ய ஆய்வு செய்ய லிஸ் டிரஸ் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
லிஸ் டிரஸ்
லிஸ் டிரஸ் anti-immigration ஆதரவாக இருக்கும் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாக இந்த முடிவை எடுக்க உள்ளார். குறிப்பாக "shortage occupation list" பட்டியலில் பலமாற்றங்களைச் செய்வதன் மூலம் பல துறைகளில் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை நியமிக்க முடியும்.
ஆங்கிலம் விதிமுறைகள்
இதைவிட முக்கியமான சில துறையில் அதிகப்படியான தொழிலாளர்களை ஈர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் காரணத்தால் ஆங்கிலம் பேச வேண்டும் என்ற விதிமுறைகளிலும் தளர்வுகளைக் கொண்டு வர ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
ப்ளூ காலர் வேலைவாய்ப்புகள்
இந்த விதிமுறை தளர்வுகள் ப்ளூ காலர் வேலைவாய்ப்புகளில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்குச் செல்வோர் இனி பிரிட்டன் நாட்டிற்குச் செல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வொயிட் காலர் வேலைவாய்ப்புகளுக்கு இந்தி விதிமுறை தளர்வால் பெரிய அளவிலான நன்மை கிடைக்காது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications