உலகளாவிய அரசியல் பதற்றம் தற்போது இந்திய மக்களையும், இந்திய மக்களுக்கு எளிதாக கிடைக்க கூடிய சேவைகளும் பாதிக்க தொடங்கியுள்ளது. ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மத்தியிலான போர் காரணமாக இந்தியாவில் எரிவாயு (எல்பிஜி) விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இப்போது எரிவாயு மூலம் எரியூட்டு மையங்களை (crematorium) மூடியுள்ளது.
புனே மாநகராட்சி தனது எரிவாயு மூலம் எரியூட்டு மயானங்களை தற்காலிகமாக மூடியுள்ளது. இந்த முடிவு மார்ச் 5-ம் தேதி பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்ட உத்தரவால் ஏற்பட்டுள்ளது. மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் ப்ரோப்பேன் மற்றும் பியூட்டேன் போன்ற எல்பிஜி பொருட்களை வீட்டு சமையலுக்கு முன்னுரிமை அளிக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவால் வீட்டு உபயோகத்துக்கு மட்டுமே எல்பிஜி வழங்கப்படுகிறது. வணிக ரீதியான மற்றும் தொழில்சார் பயன்பாடுகளுக்கு விநியோகம் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக புனே மாநகராட்சி எரிவாயு மூலம் எரியூட்டு மையங்களை மூட முடிவு செய்தது. மார்ச் 8 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த மையங்கள் மீண்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவல் படி புனே மாநகராட்சி சுமார் 22 எரிவாயு மூலம் எரியூட்டு மையங்களை (crematorium) மூடியுள்ளது.

குறிப்பாக புனே நகரின் முக்கியமான வைகுண்ட எரியூட்டு மையத்தில் மூன்று எரிவாயு அடுப்புகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் ஐந்து மின்சார அடுப்புகள் தொடர்ந்து செயல்படுகின்றன. பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் மாற்று வசதிகள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் Air Pollution Control (APC) அமைப்புகளுடன் கூடிய மரவிறகு அடிப்படையிலான மயானங்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்திருக்கும். புனே நகரில் கேஸ் மயானங்கள் மூடப்பட்டிருப்பது, உலக அரசியல் மற்றும் எரிசக்தி சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் இந்தியாவின் அன்றாட சேவைகளையும் எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதை தெளிவாக காட்டுகிறது.

இந்த நெருக்கடி ஈரான் போரால் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட நிலையில் எல்பிஜி போக்குவரத்து மொத்தமாக பாதிக்கப்பட்டது உள்ளது. கத்தார் எனர்ஜி நிறுவனம் எரிவாயு உற்பத்தியை ஈரான் டிரோன் தாக்குதல் அச்சம் காரணமாக மூடப்பட்டு உள்ளது.
இதனால் உற்பத்தி, விநியோகம் பாதித்து இந்தியாவுக்கு மொத்த இறக்குமதியை பாதித்துள்ளது. இதனால் இந்தியாவில் இருக்கும் எரிவாயு வீட்டு உபயோகத்துக்கு மட்டுமே ஒதுக்கப்படுகிறது. வணிக பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது உணவகங்கள், ஹோட்டல்கள், மற்றும் பிற தொழில்களை பாதிக்கிறது.
மொத்தத்தில், ஈரான் போர் இந்தியாவின் எல்பிஜி விநியோகத்தை பெரிதும் பாதிப்பை ஏற்படுத்த துவங்கியுள்ளன.
More From GoodReturns

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

சிலிண்டர் புக் பண்ணியும் வரலையா? இருக்கவே இருக்கு மினி எல்பிஜி!! அதுவும் 5 நிமிஷத்துல கிடைக்கும்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications