சர்வதேச அளவில் எண்ணெய் உற்பத்தியை கட்டுக்குள் கொண்டு வரவும், எண்ணெய் விலையை கட்டுக்குள் கொண்டு வரவும் ஒபெக் நாடுகள் எண்ணெய் உற்பத்தியை கட்டுக்குள் கொண்டு வரவும் முடிவு செய்துள்ளன.
அதுவும் ஒரு நாளைக்கு 5 லட்சம் பேரல்கள் குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒபெக் என்ற எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பாகும். இதில் அல்ஜீரியா, அங்கோலா, ஈக்வடோர், ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், வெனிசுலா உள்ளிட்ட பல நாடுகள் உள்ளன.
அதிக சப்ளையை தடுக்க திட்டம்
சவுதி அரேபியா கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிகளவிலான எண்ணெய் சப்ளையை தடுக்கவும், அதன் ஆதரவு விலையை தடுக்கவும் நோக்கமாகவும் கொண்டுள்ளனர். ஒபெக் நாடுகள், சவுதி உட்பட ஒரு நாளைக்கு 2.1 மில்லியன் பேரல்கள் உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், சவுதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சர் அப்துலஜிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஆயில் விலை 2 சதவிகிதம் உயர்ந்து, பேரலுக்கு 64 டாலராக வர்த்தமாகியது.
உற்பத்தியை குறைக்க திட்டம்
எனினும் மற்றொரு புள்ளிவிவர அறிக்கையின் படி, ஒரு நாளைக்கு 5 லட்சம் பேரல்கள் எண்ணெய் உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ளன. ஒரு நாளைக்கு 1.7 மில்லியன் பேரல்கள் இலக்கு என்றும், உலகளாவிய தேவையில் 1.7 சதவிகிதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் சவுதி மட்டும் ஒரு நாளைக்கு கணிசமான அளவு குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாற்றம் எதுவும் இருக்காது
எனினும் சவுதியின் இந்த குறைப்பு இலக்கானது எண்ணெய் விலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது. 20க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களை உள்ளடக்கிய ஓபெக், உலகளவில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக எண்ணெய் செலுத்துகிறது. எனினும் மிக பெரிய உற்பத்தியாளாரான அமெரிக்காவின் உற்பத்தி அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. இதனால் கச்சா எண்ணெய் விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்கவும் வாய்பில்லை என்றும் கூறப்படுகிறது.
ஒபெக் கூட்டம்
எனினும் இந்த ஒபெக் அமைப்பின் அடுத்த கூட்டம் மார்ச் மாத தொடக்கத்தில் இருக்கலாம் எனவும் அப்துலஜிஸ் ஓபெக் கூறியுள்ளார். மேலும் இந்த 5 லட்சம் பேரல் எண்ணெய் உற்பத்தி குறைப்பு நடவடிக்கையில், ஒபெக் நாடுகள் 3,72,000 பேரல்களும், மீதம் 1,31,000 பேரல்கள் ஒபெக் அல்லாத அல்லாத மற்ற நாடுகளும் உற்பத்தியை குறைக்கலாம் என்றும் ஒபெக் அறிவித்துள்ளது.
விலை அதிகரிக்கலாம்
இதனால் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்திற்கு இது வழி வகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவை பொறுத்தவரையில் அதிகளவு இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆக சர்வதேச அளவில் விலையேற்றம் காணும் போது, இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

எரியும் நெருப்பில் எண்ணெய்! நயாராவின் 35 நாள் முடக்கம்.. இந்தியாவின் நிலை என்னவாகும்?

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

1970-களை விட மோசமான எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்! உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து?IEA எச்சரிக்கை?

சரியான நேரத்தில் கைகொடுத்த ரஷ்யா! மங்களூரு துறைமுகத்தில் நங்கூரமிட்ட எண்ணெய் கப்பல்! பெரும் நிம்மதி..!

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு



Click it and Unblock the Notifications