இந்திய டாக்டர்களை பணியமர்த்த இருப்பதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ள நிலையில் இந்திய டாக்டர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த 3 ஆண்டுகளில் 180 இந்திய டாக்டர்கள் சிங்கப்பூரில் பணியாற்றுவார்கள் என கூறப்படுகிறது.
இதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியாகியுள்ள நிலையில் இந்திய டாக்டர்கள் சிங்கப்பூர் செல்ல தயாராகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய டாக்டர்கள்
அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து 180 டாக்டர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது. இதுகுறித்த ஊடக அறிக்கை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிங்கப்பூரில் பணி
தற்போது சிங்கப்பூரில் பணி புரிந்து வரும் பல வெளிநாட்டு டாக்டர்களின் ஒப்பந்தம் அக்டோபர் 10ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரில் பணிபுரிய இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 60 டாக்டர்கள் பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் 2025 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் டாக்டர்களை பணியில் அமர்த்தும் திட்டம் தொடரும் என்றும் சிங்கப்பூர் அரசு கூறியுள்ளது.
சுகாதாரத்துறை
சிங்கப்பூர் மருத்துவர்களின் அதிகமான பணிச்சுமையை குறைக்கவும் சிங்கப்பூரின் சுகாதாரத்தை பூர்த்தி செய்யவும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் அரசு டாக்டர்களை நியமித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மட்டுமின்றி பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து டாக்டர்களை பணியமர்த்த இருப்பதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.
பதிவு பெற்ற மருத்துவ கல்லூரிகள்
ஆனால் அதே நேரத்தில் சிங்கப்பூர் மருத்துவ கவுன்சிலில் பட்டியலிடப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் பட்டம் பெற்ற டாக்டர்களை மட்டுமே சிங்கப்பூர் அரசு தேர்வு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. சிங்கப்பூர் மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சம்பளம்
பணக்கார நாடான சிங்கப்பூரில் மருத்துவராக செல்லும் இந்திய டாக்டர்களுக்கு கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!



Click it and Unblock the Notifications