இந்தியாவில் உள்ள அரசுக்கு சொந்தமான் மிகப்பெரிய நிறுவனங்களில் என்டிபிசியும் ஒன்று. இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பை பெற்ற மிகப்பெரிய நிறுவனமாகும்.
இந்த பொதுத்துறை நிறுவனம் டெல்லியில் உள்ள அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் (ADAG) இரண்டு பயன்பாடுகளில் 51 சதவீதங்களை வாங்குவதற்கான ஆர்வத்தினை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் மின்சார விநியோக வணிகத்தில் ஈடுபட முடியும் என்பதால் என்டிபிசி (NTPC) இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ADAG சொந்தமாக இரண்டு டிஸ்கோம்கள் உள்ளன. ஒன்று BSES Rajdhani Power Ltd (BRPL), மற்றொன்று BSES Yamuna Power Ltd (BYPL) ஆகும். நாட்டில் முதன்மையான மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசி இதனை வாங்கும்போது மின் விநியோகத்திலும் ஈடுபட முடியும் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து NTPC, டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு மே 26ம் தேதி எழுதிய கடித்தத்தில், மின்சார விநியோக துறையில் நுழைவதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளதாகவும், இதற்காக BRPL மற்றும் BYPLல்லின் பங்குகளை வாங்குவதில் ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஊடக அறிக்கையின் படி, BRPL மற்றும் BYPLல் உள்ள 51 சதவீத பங்குகளை ADAG விலக்க விரும்புவதாக நாங்கள் அறிந்து கொண்டோம். ஆக இது எங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று என்டிபிசி தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆக விற்பனைக்கு வரும், BRPL மற்றும் BYPLன் 51 சதவீத பங்குகளை வாங்க என்டிபிசி ஆராய ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விற்பனையானது ஒரு வெளிப்படையான செயல்முறையின் மூலம் செய்யப்படுகிறது.
இவ்வாறு என்டிபிசி நிறுவனம் கூறுவது போல, மேற்கண்ட இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதன் மூலம், இதுவரை மின்சார உற்பத்தியில் மட்டுமே முதலிடமாக இருந்து வந்த நிறுவனம், பிறகு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தினை விநியோகப்பதிலும் முன்னிலை வகிக்கலாம். ஆக இது இந்த நிறுவனத்திற்கு பயனுள்ள ஒரு வாய்ப்பு தான். இதன் மூலம் இந்த நிறுவனத்தின் மதிப்பு இன்னும் மேம்படும் என்பதோடு, இதன் சேவையினையும் இன்னும் விரிவுபடுத்த முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications