எதிர்காலத்தை கணிப்பது கடினம்.. பணி நீக்கம் குறித்து சுந்தர் பிச்சை கருத்து.. குழப்பத்தில் ஊழியர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை எதிர்காலத்தினை கணிப்பது கடினம் என பணி நீக்கம் குறித்த கேள்விக்கு சூசகமான பதிலை அளித்துள்ளார்.

மற்றொரு சமீபத்திய அறிக்கையில் குறைந்த செயல் திறன் கொண்ட ஊழியர்களை கூகுள் 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் பணி நீக்கம் செய்யலாம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பணி நீக்கமா.. முக்கிய அப்டேட் கொடுத்த கூகுள் நிறுவனம்.. ஊழியர்கள் அச்சம்!பணி நீக்கமா.. முக்கிய அப்டேட் கொடுத்த கூகுள் நிறுவனம்.. ஊழியர்கள் அச்சம்!

சுந்தர் பிச்சையின் கருத்து

சுந்தர் பிச்சையின் கருத்து

எனினும் பணியாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய சுந்தர் பிச்சை, " better weather the storm" என கூறியுள்ளார். பணி நீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய ஊழியருக்கு பதிலளித்த சுந்தர் பிச்சை, எதிர்காலத்தினை கணிப்பது மிகவும் கடினமானது. அது நேர்மறையாக இருக்கும் என எதிர்பார்க்க முடியவில்லை. நாங்கள் கடினமான முயற்சி செய்கிறோம்.

சிறப்பாக செய்வோம்

சிறப்பாக செய்வோம்

கடந்த சில மாதங்களாக நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். நாங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்க முயற்சி செய்கிறோம். எங்களால் முடிந்த வரையில் சமாளிப்போம். சவால்களை சமாளிக்கும் அளவுக்கு முயற்சி செய்துள்ளோம். எனினும் என்ன வரப்போகிறது என தெரியவில்லை. எனினும் அது அதனை பொருட்படுத்தாமல் அதில் கவனம் செலுத்தி, முடிந்த வரையில் சிறப்பாக செய்வோம்.

பணி நீக்க திட்டம்
 

பணி நீக்க திட்டம்

கடந்த நவம்பர் மாதம் வெளியான அறிக்கையில் கூகுள் உயர் அதிகாரிகள் மத்தியில் 6% அல்லது 10,000 ஊழியர்களை அடையாளம் காண கூறியதாக தகவல்கள் வெளியானது. குறிப்பாக இந்த செயலில் குறைந்த செயல் திறன் உள்ள ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியானது.

கணக்கிடுங்கள்

கணக்கிடுங்கள்

ஆக இவ்வாறு பட்டியலிடப்பட்ட ஊழியர்கள் 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் பணி நீக்கம் செய்யப்படலாம் என தெரிகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறுவனம் 2% ஊழியர்களை அடையாளம் காணுமாறு மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

ஊழியர்கள் அச்சம்

ஊழியர்கள் அச்சம்

தொடர்ந்து உலகின் டெக் ஜாம்பவான்கள் ஆன மெட்டா, மைக்ரோசாப்ட், அமேசான், ட்விட்டர், சிஸ்கோ என பல நிறுவனங்கள் பெரியளவில் பணி நீக்கம்ம் செய்துள்ளன. இந்த போக்கு இன்னும் சிறிது காலத்திற்கு தொடரலாம் என்ற அச்சமான நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் கூகுள் நிறுவனத்திலும் இத்தகைய நடவடிக்கைகள் இருக்கலாமோ என்ற அச்சம் ஊழியர்கள் மத்தியில் இருந்து வருகின்றது.

கவனமாக செயல்படுங்கள்

கவனமாக செயல்படுங்கள்

முன்னதாக கூகுள் நிறுவனத்தின் மனிதவள அதிகாரி தரப்பில், பணி நீக்கம் குறித்து தற்போதைய சூழலில் பணி நீக்கம் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை. எனினும் ஊழியர்கள் கவனமுடன் பணிபுரிய வேண்டும். பொருளாதாரம் எப்படி மாறும் என்பது தெளிவாக தெரியவில்லை என கூறியது நினைவுகூறத்தக்கது.

ஊழியர்கள் என்ன செய்யலாம்?

ஊழியர்கள் என்ன செய்யலாம்?

ஊழியர்களின் அச்சத்தினை அதிகரிக்கும் விதமாக கடந்த சில காலாண்டுகளாகவே, கூகுள் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமானது சரிவினைக் கண்டது. மேலும் சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், தேவையானது சரிவினைக் கண்டுள்ளது. ஆக இந்த போக்கானது இன்னும் சிறிது காலத்திற்கு தொடரலாம் என்ற அச்சமே இருந்து வருகின்றது. ஆக இதுபோன்ற சவாலான காலகட்டத்தில் ஊழியர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள, கூடுதலாக கவனம் செலுத்துவதுடன், தங்களது திறனையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இது அவர்களை கவசமாக நின்று பாதுகாக்கும் எனலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sundar pichai on layoffs in google: its really tough to predict the future

Responding to an employee who questioned the layoffs, Sundar Pichai said it is very difficult to predict the future. He said that he could not expect it to be positive.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X