பொருளாதாரத்தில் இரண்டு நாடுகளும் மோசமான நிலையில் இருந்தாலும், ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
இப்படி இருக்கையில் ஆப்கானிஸ்தான் நாட்டை ஆட்சி செய்யும் தாலிபான்கள் இனி தன் நாட்டில் பாகிஸ்தான் ரூபாயைப் பயன்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளது.இது பாகிஸ்தானுக்குப் பெரும் அதிர்ச்சியாக விளங்குகிறது.
இதுமட்டும் அல்லாமல் இந்தத் தடை அக்டோபர் 1 முதல் அமலாக்கம் செய்யப்பட்டதாக ஆப்கான் நாட்டின் காமா பிர்ஸ் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான்
தாலிபான் புலனாய்வு அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டில் இனி பாகிஸ்தான் ரூபாய் நோட்டுகளை வைத்துப் பணம் பரிமாற்றம் செய்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது என அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் ரூபாய்
இத்தகைய அறிவிப்புக்கு முக்கியக் காரணம் ஆப்கானிஸ்தான் நாட்டில் பாகிஸ்தான் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்திப் பணச் சலவை அதிகளவில் செய்யப்படுவதால் இந்த முடிவை எடுக்கப்பட்டு உள்ளது. இந்தத் தடை மூலம் அனைத்து விதமான நிதியியல் பரிமாற்றத்தில் இருந்தும் பாகிஸ்தான் ரூபாய் தடை செய்யப்பட்டு உள்ளது.
கட்டுப்பாடுகள்
இதேபோல் பாகிஸ்தான் ரூபாய் நோட்டுகளை மாற்ற Money Exchange டீலர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது, அதாவது ஒரு நாளுக்கு 500000 பாகிஸ்தான் ரூபாய்க்கு மேல் மாற்றக்கூடாது அப்படி மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான தண்டனைகள் உடன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மக்கள்
ஆப்கானிஸ்தான் நாட்டில் மக்களும், வர்த்தகர்களுக்கும் தினமும் வாங்கும் காய்கறி, பழங்கள் முதல் ஏற்றுமதி இறக்குமதி வரையில் அனைத்திற்கும் பாகிஸ்தான் ரூபாய் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தான் நாட்டைத் தாலிபான்கள் கைப்பற்றிய நாளில் இருந்து பாகிஸ்தான் உறவில் பல்வேறு பிரச்சனைகள் எதிர்கொண்டு வருகிறது. இதன் வாயிலாகத் தற்போது பாகிஸ்தான் ரூபாய் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் கூடுதல் ரூபாய் பாகிஸ்தான் நாட்டிற்குள் வரும் இது மதிப்பைக் குறைக்கும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications