தமிழ்நாடு அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மூலம் தொடர்ந்து புதிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் துவங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஏற்ப கட்டுமானம், போக்குவரத்து, வீட்டு வசதி, நகர மேம்பாடுகள் போன்ற பல திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
இவை அனைத்தும் முழுமையாக வெற்றி அடைய வேண்டும் என்றால் போதுமான ஊழியர்களை இருந்தால் மட்டுமே முடியும்.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில் இரண்டையும் இணைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சொந்தமாக வேலைவாய்ப்புத் தளத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு அமைப்புப் புதிதாக ஒரு ஜாப் போர்ட்டல் அதாவது நிறுவனத்தையும், மக்களையும் இணைக்கும் ஒரு வேலைவாய்ப்புத் தளத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. விரைவில் இந்தத் தளத்தைத் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் துவக்கிவைப்பார் என அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு தேடல் தளம்
தமிழ்நாட்டு அரசுக்கு தற்போது நல்ல தேடுதல் அம்சத்துடன் கூடிய வேலைவாய்ப்பு தேடல் தளம் தேவை இருக்கும் நிலையில் விரைவில் இதை அரசு அறிமுகம் செய்ய உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பை முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஜே இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
ப்ளூ காலர் வேலைவாய்ப்புகள்
தமிழ்நாட்டில் ப்ளூ காலர் வேலைவாய்ப்புகளில் (அதாவது பட்டப்படிப்பு தேவைப்படாத வேலைவாய்ப்புகள்) பங்குபெறுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் பெரும் கவலையாக இருக்கிறது.
அடிப்படை காரணம்
இத்தகைய ப்ளூ காலர் வேலைவாய்ப்புகளை விரும்பி எடுக்கும் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில், இந்தப் பிரச்சனைக்கான அடிப்படை காரணத்தைக் கண்டறிந்து மக்களை வேலைவாய்ப்பு சந்தைக்குள் கொண்டு வர முயற்சியில் கொண்டு வரப்பட்டது தான் இந்தப் புதிய வேலைவாய்ப்பு தேடல் தளம்.
திறன் மேம்பாட்டுப் பயிற்சி
தமிழக அரசு பல வருடமாக விவசாயத் துறை உட்படப் பல துறையில் மக்களின் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் படித்த மாணவர்களுக்கு ஐபிஎம், டிசிஎல், ஹெச்சிஎல் உடன் இணைந்து பல பிரிவுகளிலும், தொழில்நுட்பத்திலும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சி
இதேபோல் பல தனியார் நிறுவனங்களும், அமைப்புகளும் தானாக முன்வந்து இத்தகைய பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. வேலைவாய்ப்பு சந்தைக்குத் தேவையான திறன்கள் மக்களுக்குக் கிடைத்துவிடும் பட்சத்திலும், அதிகளவிலான பெண்கள் வேலைவாய்ப்பு சந்தைக்கு வரும் பட்சத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி அளவு புதிய உச்சத்தைத் தொடும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications