அரசு அதிகாரிகளுக்கும் 'Work From Home'.. மத்திய அரசின் முக்கிய முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியிருக்கின்றனர். இதனால் ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்வது போல அரசு அதிகாரிகளும் வீட்டில் இருந்தே பணியாற்ற புதிய கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது.

ஆம் Department of Personnel and Training (DoPT) துறை மத்திய அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற புதிய கொள்கை முறையை வடிவமைத்துள்ளது. இப்புதிய முறை லாக்டவுன் காலம் முடிந்த பின்பு நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டு, ஒப்புதலுக்காகச் சமர்ப்பித்துள்ளது.

அரசு அதிகாரிகளுக்கு Work From Home என்றால் எப்படி..? அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் இது கிடைக்குமா..?

இன்று என்ன சொன்னார் நிர்மலா சீதாராமன்? A - Z முக்கிய விஷயங்கள் இதோ!இன்று என்ன சொன்னார் நிர்மலா சீதாராமன்? A - Z முக்கிய விஷயங்கள் இதோ!

48 லட்ச ஊழியர்கள்

48 லட்ச ஊழியர்கள்

மத்திய அரசின் கீழ் வரும் பல்வேறு துறைகள் மற்றும் அதன் அலுவலகங்களில் சுமார் 48,34,000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். தற்போது Department of Personnel and Training (DoPT) துறை தயாரித்துள்ள புதிய கொள்கை முறையின் படி வருடத்தில் 15 நாட்கள் மத்திய அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்.

அதேபோல் இது அனைவருக்கும் கிடையாது, சில முக்கியப் பணிகளில் இருக்கும் தகுதிவாய்ந்த ஊழியர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் என DoPT துறை தெரிவித்துள்ளது.

DoPT துறை

DoPT துறை

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில், DoPT துறை ஏற்கனவே பல்வேறு அமைச்சக அலுவலகங்களுக்கும் ஊழியர்களுக்கும் சமுக இடைவெளியை கடைப்படித்து வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டியது கட்டாயம் என அறிவித்துள்ளது. இதை ஏற்றுப் பல்வேறு மத்திய அரசு துறை அலுவலகங்கள் இயங்கி வருகிறது.

தொழில்நுட்ப உதவி

தொழில்நுட்ப உதவி

கொரோனா காலத்தில் பல்வேறு அரசு துறைகள் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. குறிப்பாகக் கொரோனா தடுப்புப் பணியில் இருக்கும் முக்கிய அரசு துறைகள் அனைத்தும் முதல் முறையாக E-office மற்றும் வீடியோ கான்பிரென்சிங் முறையைப் பயன்படுத்து பணியாற்றி வருகிறது. இந்தியாவிற்கும், அரசு அதிகாரிகளுக்கும் இது புது விதமான அனுபவமாக உள்ளது.

விதிமுறைகள்

விதிமுறைகள்

கொரோனா பாதிப்பில் கிடைத்த அனுபவத்தை வைத்து தொடர்ந்து மத்திய அரசு ஊவியர்கள் கொரோனா லாக்டவுன் காலத்திற்குப் பின்பு வீட்டில் இருந்து பணியாற்றவும், தொடர்ந்து வேலைகளைச் செய்யவும் இத்திட்டம் மூலம் வழிவகைச் செய்யப்பட உள்ளது.

அப்படி வீட்டில் இருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு அரசு சார்ப்பில் லேப்டாப் அல்லது கம்பியூட்டர் கொடுக்கப்படும். மேலும் வீட்டில் இருந்து வேலை செய்யும் போது இண்டர்நெட் தேவை என்பதால், இண்டர்நெட் இணைப்பிற்கான கட்டணத்தையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது (reimbursement).

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

'Work from home' to be new normal in govt offices

The Department of Personnel and Training (DoPT) has come out with a draft framework for 'work for home' for the staff post-lockdown. It may provide the option to work from home to the eligible officers/staff for 15 days in a year as a matter of policy, it said. There are 48,34,000 central government employees.
Story first published: Thursday, May 14, 2020, 16:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X