மும்பை: வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடாக யெஸ் வங்கி 1.2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 8,500 கோடி ரூபாய்) நிதியுதவி கிடைத்துள்ளதாக அவ்வங்கி தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த வங்கின் பங்கின் விலை இன்று 38 சதவிகித ஏற்றம் கண்டு, முடிவில் 24 சதவிகித ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.
தனியார் துறையை சேர்ந்த இந்த வங்கி பங்கு, பிஎஸ்.இயில் 34.94 சதவிகிதம் ஏற்றம் கண்டு 76.65 ரூபாய் வரை அதிகரித்து, பின்னர் முடிவில் 24 சதவிகித ஏற்றத்துடன் 70.45 ரூபாயாக முடிவடைந்தது.

இதே என்.எஸ்.இயில் இந்த பங்கின் விலை 38.55 சதவிகிதம் ஏற்றம் கண்டு 78.70 ரூபாய் வரை சென்று, முடிவில் 23.77 சதவிகித ஏற்றத்துடன் 70.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இந்த வங்கிக்கு கிடைக்கும் முதலீட்டின் மூலம் இவ்வங்கியின் மூலதனத்தை அதிகரிப்பதில் இவ்வங்கி உறுதியாக என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய பங்கு சந்தையில் இது பல தகவல்களினால் புதிய உச்சத்தைக் கண்டன, இந்த நிலையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 77 புள்ளிகள் ஏற்றம் கண்டும் 40129 ஆக முடிவடைந்துள்ளது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 33 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,877 ஆக முடிவடைந்துள்ளது.
இதே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.92 ரூபாயாக சற்று வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்த புதிய உச்சத்திற்கு காரணம் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி குறைப்பு செய்ததும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இது இன்னும் பொருளாதாரம் வலுவடையவில்லை என்ற காரணத்தினாலேயே, முதலீட்டாளர்களின் கவனம் மற்ற நாடுகளின் பக்கம் திரும்பியது என்றும் கூறலாம்.
இந்த நிலையிலேயே இந்திய பங்கு சந்தையில் சென்செக்ஸ் புதிய உச்சத்தை எட்டியது. இந்த நிலையில் பி.எஸ்.இயில் உள்ள 80க்கும் மேற்பட்ட பங்குகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. குறிப்பாக நெஸ்லே இந்தியா, பஜாஜ் ஆட்டோ, இன்ஃபோ எட்ஜ், ஹெச்.யு.எல், அவென்யூ சூப்பர்மார்ட்ஸ், பாட்டா இந்தியா, என்.ஐ.ஐ.டி, ஆர்.ஐ.எல் உள்ளிட்ட பங்குகள் நல்ல ஏற்றத்தை கண்டன.
More From GoodReturns

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!



Click it and Unblock the Notifications