டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்றிய நாளில் இருந்து தொடர்ந்து பல கருத்துக்களை அதிரடியாக முன்வைக்கிறார், இதில் குறிப்பாக வட கொரியாவிற்குக் கொடுத்து வரும் மிரட்டல், சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டிற்கு இனி நிதியுதவி அளிக்க முடியாது என அறிவித்தது எனப் பல அதிரடி முடிவுகளை நொடிப்பொழுதில் எடுத்து வருகிறார்.
இதில் முக்கியமான டிரம்ப்-இன் "Buy American, Hire American" திட்டங்கள் மற்றும் பார்வை அந்நாட்டில் வேலை செய்யும் பிறநாடவர்களுக்குத் தொடர்ந்து நெருக்கடி உருவாக்கி வருகிறது. குறிப்பாக இந்தியர்களுக்கு. இத்தகைய சூழ்நிலையில் தற்போது ஹெச்1பி விசாவில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
அமெரிக்காவின் குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பம் செய்துள்ளவர்களுக்கு அளிக்கப்படும் ஹெச்1பி விசா கால நீட்டிப்பை உடனடியாகவும், முழுமையாகவும் தடை செய்ய வேண்டும் என டிரம்ப் அரசு ஹோம்லேன்டு செக்யூரிட்டி அமைப்பிற்கு மெமோவாக அனுப்பியுள்ளது.
கிரீன் கார்டு
கிரீன் கார்டு எனக் கூறப்படும், அமெரிக்காவின் குடியுரிமை பெற நினைக்கும் வெளிநாட்டவர்கள் இதற்காக விண்ணப்பம் செய்வார்கள், இவர்களது விண்ணப்பம் ஒப்புதல் பெறப்படாத நிலையில் இருந்தால் இவர்களுக்கான ஹெச்1பி விசா காலம் 2-3 வருடத்திற்கு நீட்டிக்கப்படும்.
இதனைப் பயன்படுத்திப் பல வெளிநாட்டவர்கள் குறைந்தபட்சம் 2 வருடம் அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தியர்கள்
இப்புதிய அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் நிலையில், அமெரிக்காவில் இருக்கும் இந்திய ஊழியர்கள் அதிகளவிலான பாதிப்பை சந்திக்க நேரிடும். அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் பெருமளவில் ஐடித் துறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
வெளியேற்றம்
இதன் மூலம் ஹெச்1பி விசா வைத்துள்ள 75,000 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வெளியேற்றப்படும் சூழ்நிலை உருவாகும்.
ஹெச்1பி விசா வைத்துள்ள ஒருவர், சில முக்கியத் தகுதிகளைப் பெற்று இருந்தால் கிரீன் கார்டு பெற விண்ணப்பம் செய்யலாம், விண்ணப்பம் ஒப்புதல் பெறுவதற்கு முன்பு அந்த நபரின் விசா காலத்தை 3 வருடம் வரையில் நீட்டிப்புச் செய்யப்படும். இந்தச் சலுகையைத் தான் தற்போது டிரம்ப் அரசு முழுமையாக நீக்கப்பட்ட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
நாஸ்காம்
இப்புதிய அறிவிப்பால் அதிகளவில் பாதிக்கப்படுவது இந்திய ஐடி ஊழியர்கள் என்பதால் நாஸ்காம் அமைப்பு அமெரிக்காவின் முக்கியத் தலைவர்களிடம் விசா பிர்சனை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அமெரிக்க மசோதா
தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள Protect and Grow American Jobs என்னும் மசோதாவின் எதிரொலியாக இப்புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய அறிவிப்பின் மூலம் வெளிநாட்டு ஊழியர்களை அதிகளவில் பணியில் அமர்த்தியுள்ள நிறுவனங்கள் பாதிக்கப்படும்.
சம்பளம்
சில மாதங்களுக்கு முன்பு ஹெச்1பி விசா பெறுவதற்கான குறைந்த பட்ச சம்பளத்தை 2 மடங்கிற்கு அதிகமாக உயர்த்தி இந்தியர்களின் அமெரிக்கக் கனவை சீர்குலைத்த நிலையில், தற்போது இதனை அறிவித்துள்ளது.
85,000 விசாக்கள்
அமெரிக்க அரசு ஒவ்வொரு ஆண்டும் 85,000 ஹெச்1பி விசா அளித்து வருகிறது, இதில் 65,000 பொதுப் பிரிவிலும், 20,000 விசாக்கள் அமெரிக்கக் கல்லூரியில் மேற்படிப்பை முடித்தவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
இதில் 70 சதவீத விசாக்கள் இந்தியர்களுக்குச் செல்வதாக ஆய்வுகள் கூறுகிறது.
More From GoodReturns

டிரம்ப் எடுத்த ஒற்றை முடிவு.. இந்தியா-வுக்கு பெரும் இழப்பு..!!

சாயம் வெளுக்க துவங்கியது.. பணத்தை திரும்ப கொடுக்க முடியாது.. அமெரிக்க முதலீட்டு நிறுவன அறிவிப்பால் ஷாக்..!!

15 நாட்களில் 40% மேல் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை: ஈரான் போர் முடிவது தான் தீர்வா?

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!



Click it and Unblock the Notifications