ஆம்ஸ்டர்டாம்: சர்வதேச அளவில் எலக்ட்ரானிக், சுகாதாரத் துறை உபகரண உற்பத்தியில் முன்னணி நிறுவனமான திகழும் பிலிப்ஸ், தனது நிறுவனத்தின் புதிய தலைமை நிதியியல் அதிகாரியாக ஒரு இந்தியரை நியமித்துள்ளது.
மைக்ரோசாப்ட், கூகிள்
சமீப காலமாகச் சர்வதேச நிறுவனங்களின் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக மைக்ரோசாப்ட், கூகிள் நிறுவன தலைவர் நியமனத்திற்குப் பின் உயர் நிர்வாகக் குழுவில் நியமிக்கப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பிலிப்ஸ்
பிலிப்ஸ் நிறுவனத்தின் தலைமையகமான ஆம்ஸ்டர்டாம் அலுவலகத்தில் இருந்து வெளியான அறிவிப்பின் படி இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான ரான் நிறுவனத்தை விட்டு வெளியேறிய நிலையில், இப்பதவியில் அபிஜீத் பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளது.
அபிஜீத் பட்டாச்சார்யா
பிலீப்ஸ் நிறுவனத்தில் இருந்து தனியாகப் பிரிந்த LIGHTING பரிவின் தலைமை நிதி மேலாளராகப் பணியாற்றும் அபிஜீத் பட்டாச்சார்யா தற்போது பிலிப்ஸ் NV நிறுவனத்தின் சிஎப்ஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார்.
என்எக்ஸ்பி செமிகண்டாக்டர்ஸ்
இதற்கு முன் இவர் பிலிப்ஸ் நிறுவனத்தின் ஹெல்த்கேர் பிரிவின் சிஎப்ஓ ஆகவும், என்எக்ஸ்பி செமிகண்டாக்டர்ஸ் போன்ற பல நிறுவனங்களில் சிஎப்ஓவாகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.