கொழும்பு: கச்சா எண்ணெய் சுத்திகரிக்க 2வது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை இந்தியா மற்றும் இலங்கை கூட்டணியில் அந்நாட்டில் உருவாக்கப்பட உள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து ஒரு நாளுக்கு 1,00,000 பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் திறன் கொண்டு தொழிற்சாலையை அமைக்கும் பணியில் இலங்கை அரசுடன் இணைந்துள்ளது.
இலங்கை
இந்தியாவுடன் இணைந்து இலங்கையில் உருவாக்கப்படும் 2வது தொழிற்சாலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியா-இலங்கை மத்தியிலான நட்புறவும் வலிமை அடையும் என இலங்கை அரசு அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சீனா முதலீடு
இலங்கையில் பல வளர்ச்சி திட்டங்களில் இந்திய ஈட்டுப்பட்டுள்ளது, மட்டும் அல்லாமல் இந்திய எல்லைகளில் அவ்வப்போது நமக்குப் பிரச்சனை அளிக்கும் சீனா, இலங்கையில் சுமார் 1.4 பில்லியன் டாலர் முதலீட்டில் மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டத்திற்கு வித்திட்டதுள்ளது.
சீனா உதவில் மிகமுக்கியமாகப் பார்க்கப்படுவது நிலக்கரி உற்பத்தி தளத்தில் இருந்து துறைமுகத்திற்குக் கொண்டு வரும் போக்குவரத்துத் திட்டம் தான்.
திருகோணமலை
புதிதாக அமைக்கப்பட உள்ள சுத்திகரிப்பு தொழிற்சாலை இலங்கையின் கிழக்கு துறைமுக நகரமான திருகோணமலை பகுதியின் அருகில் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் இனி இலங்கை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ஏற்றுமதியில் மிகப்பெரிய வர்த்தகத்தைப் பார்க்கப்போகிறது.
4 ஆண்டுகள்
ஒரு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை முழுமையாக உருவாக்க சுமார் 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் இப்பகுதியில் ஏற்பகனவே எண்ணெய் நிரப்பு டேங்குகள் அமைக்கப்பட்டுவிட்டது என் இலங்களை அரசு நிறுவனமான சிலோன் பெரோலியம் கார்ப்-இன் தலைவர் டி.ஜி.ஜெயசிங்கே கூறினார்.
இலங்கை ஐஓசி
இலங்கையில் இருக்கும் 99 எண்ணெய் சேகரிப்பு டேங்குகளில் 15 டேங்குகள் இலங்கை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் மீதமுள்ள 99 டேங்களுகளைப் பராமரிப்பிலும் மேம்பாட்டிலும் இலங்கை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளது இந்நாட்டு அரசு.


Click it and Unblock the Notifications