சான் பிரான்சிஸ்கோ: சமுக வளைதள நிறுவனமான டிவிட்டர், பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மொபைல் மார்கெட்டிங் மற்றும் அனல்டிக்ஸ் நிறுவனமான ஜிப்டயல் மொபைல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை கையகபடுத்துவதாக அறிவித்துள்ளது.
மேலும் இந்நிறுவனம் உலக நாடுகளில் பல நிறுவனங்களை கைபற்றியுள்ள நிலையில், இந்தியாவில் இதுவே முதல் நிறுவனமாகும்.
இந்தியாவில் டிவிட்டர்
ஜிப்டயல் நிறுவனத்தை கைபற்றியதன் மூலம் இந்தியாவில் டிவிட்டர் நிறுவனத்தின் முதல் அலுவலகத்தை அமைக்க நுழைவாயிலாக அமைந்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தை 30-40 மில்லியன் டாலருக்கு கைபற்றயுள்ளதாக டெக்க்ரஞ்ச் தெரிவித்துள்ளது.
டிவிட்டர்
இன்றைய நிலையில் டிவிட்டர் தளத்தில் உலக நாடுகளில் முழுவதிலும் சுமார் 284 மல்லியன் வாடிக்கையாளர் இணைந்துள்ளனர்.
ஜிப்டயல்
இந்நிறுவனம் 2010ஆம் ஆண்டு துவங்கப்பட்டது, இந்நிறுவனத்தின் மொபைல் மார்கெட்டிங் தளத்தின் மூலம் வாடிக்கையாளர் மில்டு கால் கொடுத்தால் போது பிஸ்னஸ் பற்றிய தகவல்களை அளித்திவிடும் இந்நிறுவனம். இத்தகைய சேவையின் மூலம் இந்நிறுவனம் நிறுவனங்களுக்கு மத்தியில் விரையில் பிரபலமானது.
60 மில்லியன் வாடிக்கையாளர்
ஜிப்டயல் நிறுவனம் இந்த நான்கு வருட வர்த்தகத்தில் சுமார் 60 மில்லியன் பயனாளிகளை கொண்டு, பெப்சி, லேக்மி, ஓரியோ, கோல்கேட், கஃபே காஃபி டே மற்றும் டிஸ்னி போன்ற நிறுவனங்களை வாடிக்கையாளராக கொண்டுள்ளது.
பேஸ்புக்
டிவிட்டர் நிறுவனத்திற்கு போடியாளரான பேஸ்புக் நிறுவனம் ஜனவரி 2014ஆம் ஆண்டில் பெங்களுரை சேர்ந்த லிட்டில் ஐ லேப்ஸ் நிறுவனத்தை கைபற்றியது குறிப்பிடதக்கது.
பேஸ்புக் கைபற்றிய 10 நிறுவனங்கள்
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.