இனி கணினி புரோகிராமர்களுக்கு எச்-1பி விசா கிடையாது: டிரம்ப் அதிரடி முடிவு
அமெரிக்க அரசு எச்-1பி விசாவில் பல திருத்தங்களைச் செய்ய முயற்சித்து வருகின்றது, இப்போது அதில் முக்கியமாகக் கணினி புரோகிராமர்கள் எச்-1பி விசா வழங்கப்பட மாட்டாது என்று சென்ற வாரம் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சட்டப்பூர்வமான குடியேற்ற மேம்பாட்டு ஆணையம் மார்ச் 31-ம் தேதி புதுக் குடியேற்ற விதிகளை வெளியிட்டுள்ளது. அது 2000 டிசம்பர் 22 கணினி தொடர்பான பணிகளுக்கான தகுதிகளில் இருந்து எச்-1பி விசா வழங்குவதில் திருத்தும் கொண்டுவரப்பட்டுள்ளது.
2000-ம் ஆண்டு வெளியிடப்பட்ட எச்-1பி விசாக்கலுக்கான ஆவணம் மற்றும் விண்ணப்ப விதிமுறைகள் விரைவில் மாற்றப்படும் என்றும் கூறப்படுகின்றது.
2000-ம் ஆண்டின் மெமோ
2000-ம் ஆண்டின் மெமோவை பொருத்த வரை எல்லாக் கணினி வல்லுநர்களும் அதாவது கோடர், டெஸ்டர் என அனைவருக்கும் அவர்களது பணிக்காக எச்-1பி விசா பெற முடியும். இதில் அதற்கான முறையான வழிமுறைகளைப் பின் பற்றுவது மிக அவசியம்.
நாஸ்காம்
எச்-1பி விசாவிற்கான இந்தப் புதிய மெமோவை ஆய்வு செய நாஸ்காம் இதனால் எச்-1பி விசாக்கல் பயன்படுத்து செல்ல இருக்கும் நுழைவு நிலை ஊழியர்கள் எண்ணிக்கை குறையும் என்று கூறுகின்றது.
எங்களது நிறுவனங்கள் எச்-1பி விசா பயன்படுத்திச் சாதாரணமாக நுழைவு நிலை ஊழியர்களைப் பணிக்கு எடுப்பதில்லை அதனால் எங்களது வணிகத்தில் பெரிதாக எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் (நாஸ்காம்) நிறுவனத்தின் ஐ.டி. தொழில்துறை சம்பந்தப்பட்ட தேசிய கூட்டமைப்பு குளோபல் வர்த்தக மேம்பாட்டு இயக்கத்தின் தலைவர் சிவேந்திர சிங் தெரிவித்தார்.
திறன் மற்றும் அறிவு சார் உதவிக்கு மட்டும் எச்-1பி விசா
அமெரிக்க அரசின் இந்தப் புதிய மெமோவை பார்க்கும் போது கணினி புரோகிராமர்கள் பணிக்கு எடுக்கலாம் ஆனால் அவர்கள் ஐடி திறன் மற்றும் அறிவு சார்ந்த உதவிக்கு மட்டும் நிறுவனங்கள் பயன்படுத்தலாம் என்று கூறுகின்றது.
புரோகிராமர்கள் பணிக்கு ஆட்கள் எடுப்பது குறையும்
இதைப் பார்க்கும் போது சில புரோகிராமர்கள் பணிக்கு ஆட்களை எடுப்பது குறையும் என்பது உறுதி செய்யப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுப் புரோகிராமர்கள் பணிக்காக இனி ஆட்களைத் தேர்வு செய்ய முடியாது என்றும் வெளிநாடுகளில் இருக்கும் இந்திய மென்பொருள் மற்றும் அதன் டெக்னாலஜி, வல்லுநர், தொழிலாளர்களைக் கண்காணிக்கும் தேசிய அமைப்பின் நிறுவனர் ராஜீவ் தப்தாக்கர் தெரிவித்தார்.
குறைந்த படிப்பு வேலைக்கு ஆகாது
இந்த நிலை நீண்ட காலமாக இப்படித் தான் இருக்கின்றது, இப்போது மெமோ வடிவில் வந்துள்ளது. அமெரிக்க இலங்கலைப் பட்டங்களுக்கு நிகரானவர்களைப் பணிக்கு எடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றது. அதனால் விருந்தினர் தொழிலாளர்களாகக் குறைந்த படிப்புடன் எச்-1பி விசா பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

ஈரான் போர்: மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு டிரம்ப் அரசு முக்கிய உத்தரவு!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications