சென்னை: நாம் அனைவருமே கண்டிப்பாக அழுக்கடைந்த, சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போம். அதை என்ன செய்வது என்று தெரியாததால் நாம் அதைப் பற்றி யோசிப்பதே இல்லை.
அதைப் பற்றி அறிந்து கொள்ளும் முன் அழுக்கடைந்த, சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் என்றால் என்ன என்பதைக் காணலாம்.
அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகள்:
அழுக்கு படிந்து, சிறிது கிழிந்து காணப்படும் நோட்டுகளே இந்த வகையில் வருகின்றன. இரண்டு ஓரங்களிலும் எண்கள் கொண்ட, அதாவது பத்து ரூபாய்க்கு மேற்பட்ட ரூபாய் நோட்டுகள் இரண்டாக கிழிந்திருந்தாலும் இதில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன.
என்ன செய்யலாம்?
இந்த வகை நோட்டுகளை மாற்றிக்கொள்ள இயலும். அரசு வங்கிக் கிளைகளில் உள்ள கவுன்ட்டர்கள், தனியார் வங்கிகளின் நாணயமாற்று கிளைகள், மத்திய ரிசர்வ் வங்கியின் வெளியீட்டு அலுவலகங்கள் போன்றவற்றில் இவற்றை மாற்றிக் கொள்ளலாம். இதற்கென படிவம் ஏதும் இல்லை.
சேதமடைந்த ரூபாய் நோட்டுகள்:
துண்டு துண்டாகிப் போன நோட்டுகள், முக்கியமான பகுதிகள் இல்லாமல் போன நோட்டுகள் ஆகியவற்றையும் கூட மாற்றிக் கொள்ளலாம். ரூபாய் நோட்டின் முக்கியமான பகுதிகள் எனப்படுவது உறுதிமொழி, உத்தரவாதம், கையெழுத்து, அசோக தூண் சின்னம், மகாத்மா காந்தியின் உருவம், நீர்க்குறியீடு ஆகியன. இருப்பினும் இந்த நோட்டுகளுக்கு திரும்பத் தரப்படும் பணம் மத்திய ரிசர்வ் வங்கி விதிகளின் படி கணக்கிடப்படுகிறது.
இந்த நோட்டுகளையும் அரசு வங்கிக் கிளைகளில் உள்ள கவுன்ட்டர்கள், தனியார் வங்கிகளின் நாணயமாற்று கிளைகள், மத்திய ரிசர்வ் வங்கியின் வெளியீட்டு அலுவலகங்கள் போன்றவற்றில் எந்தப் படிவங்களும் இன்றி மாற்றிக் கொள்ளலாம்.
மிகவும் சிதிலமடைந்த, எரிந்துபோன நோட்டுகள் என்னவாகின்றன?
மிகவும் சிதிலமடைந்த, எரிந்துபோன நோட்டுகள் சாதாரண முறைப்படி மாற்றித் தரப்படுவதில்லை. இவற்றை மத்திய ரிசர்வ் வங்கியின் வெளியீட்டு அலுவலகங்களில் மட்டுமே மாற்றிக்கொள்ள இயலும். இந்த வகை நோட்டுகளை வைத்திருப்பவர்கள் மத்திய ரிசர்வ் வங்கியின் வெளியீட்டு அலுவலகங்களில் கிளெய்ம்ஸ் பிரிவில் உள்ள பொறுப்பு அதிகாரியை அணுக வேண்டும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications