சென்னை: நாம் அனைவருமே கண்டிப்பாக அழுக்கடைந்த, சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போம். அதை என்ன செய்வது என்று தெரியாததால் நாம் அதைப் பற்றி யோசிப்பதே இல்லை.
அதைப் பற்றி அறிந்து கொள்ளும் முன் அழுக்கடைந்த, சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் என்றால் என்ன என்பதைக் காணலாம்.
அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகள்:
அழுக்கு படிந்து, சிறிது கிழிந்து காணப்படும் நோட்டுகளே இந்த வகையில் வருகின்றன. இரண்டு ஓரங்களிலும் எண்கள் கொண்ட, அதாவது பத்து ரூபாய்க்கு மேற்பட்ட ரூபாய் நோட்டுகள் இரண்டாக கிழிந்திருந்தாலும் இதில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன.
என்ன செய்யலாம்?
இந்த வகை நோட்டுகளை மாற்றிக்கொள்ள இயலும். அரசு வங்கிக் கிளைகளில் உள்ள கவுன்ட்டர்கள், தனியார் வங்கிகளின் நாணயமாற்று கிளைகள், மத்திய ரிசர்வ் வங்கியின் வெளியீட்டு அலுவலகங்கள் போன்றவற்றில் இவற்றை மாற்றிக் கொள்ளலாம். இதற்கென படிவம் ஏதும் இல்லை.
சேதமடைந்த ரூபாய் நோட்டுகள்:
துண்டு துண்டாகிப் போன நோட்டுகள், முக்கியமான பகுதிகள் இல்லாமல் போன நோட்டுகள் ஆகியவற்றையும் கூட மாற்றிக் கொள்ளலாம். ரூபாய் நோட்டின் முக்கியமான பகுதிகள் எனப்படுவது உறுதிமொழி, உத்தரவாதம், கையெழுத்து, அசோக தூண் சின்னம், மகாத்மா காந்தியின் உருவம், நீர்க்குறியீடு ஆகியன. இருப்பினும் இந்த நோட்டுகளுக்கு திரும்பத் தரப்படும் பணம் மத்திய ரிசர்வ் வங்கி விதிகளின் படி கணக்கிடப்படுகிறது.
இந்த நோட்டுகளையும் அரசு வங்கிக் கிளைகளில் உள்ள கவுன்ட்டர்கள், தனியார் வங்கிகளின் நாணயமாற்று கிளைகள், மத்திய ரிசர்வ் வங்கியின் வெளியீட்டு அலுவலகங்கள் போன்றவற்றில் எந்தப் படிவங்களும் இன்றி மாற்றிக் கொள்ளலாம்.
மிகவும் சிதிலமடைந்த, எரிந்துபோன நோட்டுகள் என்னவாகின்றன?
மிகவும் சிதிலமடைந்த, எரிந்துபோன நோட்டுகள் சாதாரண முறைப்படி மாற்றித் தரப்படுவதில்லை. இவற்றை மத்திய ரிசர்வ் வங்கியின் வெளியீட்டு அலுவலகங்களில் மட்டுமே மாற்றிக்கொள்ள இயலும். இந்த வகை நோட்டுகளை வைத்திருப்பவர்கள் மத்திய ரிசர்வ் வங்கியின் வெளியீட்டு அலுவலகங்களில் கிளெய்ம்ஸ் பிரிவில் உள்ள பொறுப்பு அதிகாரியை அணுக வேண்டும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications