சந்தேகத்திற்குரிய நிதித் திட்டங்கள் குறித்து நாம் ஏன் அறிந்திருக்க வேண்டும்?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிக வருமானம், வட்டி தரும் நிதி திட்டங்களா? உஷார் மக்களே உஷார்
சென்னை: சந்தையில் பல சந்தேகத்திற்கு இடமான திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களை பிரபலப்படுத்துபவர்கள் கவர்சிகரமான பெயர்களை தாங்கள் தொடங்கும் நிறுவனங்களுக்கு சூட்டுகின்றனர். ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுவனத்தை தொடங்கி போதுமான அளவு ஆட்கள் சேர்ந்த பின் வேறு புதிய இடங்களைத் தேடி செல்கின்றனர். இந்த திட்டங்களைப் பிரபலப்படுத்த திரை நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் முதலியவர்களைக் கொண்டு விழாக்கள் நடத்திப் பொதுமக்களைக் கவருகின்றனர். மக்களை ஈர்க்க நேரடி முகவர்களை ஏற்பாடு செய்வது, கவர்ச்சிகரமான விளம்பர அட்டைகளை அச்சிடுவது, கண்கவரும் வகையிலான விளம்பரங்கள் மற்றும் பதாகைகளை வெளியிடுவது, முதலீட்டாளர்களுக்கு பரிசுகள் வழங்குவது முதலிய யுத்திகளைக் கையாள்கின்றனர். இவர்கள் கவர்ச்சிகரமான வாசகங்களையும் உபயோகிக்கின்றனர். வாடிக்கையாளர்களை வெள்ளி உறுப்பினர், தங்க உறுப்பினர் என கவுரவப்படுத்தவும் செய்கின்றனர்.

( Are IPL teams on a strong wicket financially?)

இந்தத் திட்டங்களுள் சிலவற்றைக் காண்போம்:

சிட்ஃபண்டுகள்:

சீட்டு ஒருவகையான சேமிப்புத் திட்டம். இதில் ஒருவர் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களோடு குறிப்பிட்ட அளவிலான பணத்தை குறிப்பிட காலத்திற்கு தவணைகளாக செலுத்துவதாக ஓர் ஒப்பந்தம் செய்து கொள்கிறார். மேலும் ஒவ்வொரு சந்தாதாரரும் குலுக்கல் முறையில் அல்லது ஏல முறையில் அவரது முறை வரும்போது சீட்டுப் பணத்தை அல்லது பரிசைப் பெறத் தகுதியுடையவராகிறார். இருப்பினும் இதுபோன்ற திட்டங்கள் பல இதை நடத்துபவர்களால் தவறாக உபயோகிக்கப்பட்டுள்ளன. பல தருணங்களில் இவர்கள் போலியான திட்டங்களை நடத்திய சம்பவங்களும் நடந்துள்ளன.

வைப்புத் தொகை திட்டங்கள் (டெபாசிட்டுகள்):

நிதி நிறுவனங்கள் மக்களிடம் இருந்து டெபாசிட்டுகள் பெற்று சராசரிக்கும் அதிகமான வட்டி தருவதாக வாக்களிக்கின்றன. தொடர்ச்சியாக அதிக வருமானம் ஈட்டுவது சாத்தியம் இல்லாததால் வட்டி மற்றும் முதலைத் தடையில்லாமல் திருப்பித் தர தொடர்ந்து புதிய டெபாசிட்டுகளையே நம்பியுள்ளனர். ஒரு கட்டத்தில் டெபாசிட்டுகள் வருவது நின்று போகும்போது முதலீட்டாளர்களுக்கு வரும் பண வரவு நின்று அவர்களை தவிக்க விட்டுச் செல்கிறது.

தனியார் பங்குகள்:

பல நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் பங்குகள், மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் மற்றும் விருப்ப பங்குகள் ஆகியவற்றை பொதுவாக பெரிய திட்டங்களின் பெயரில், அதிக வருமானம் கிடைக்குமென ஆசையூட்டி பொது மக்களுக்கு விநியோகிக்கின்றன. சட்டப்படி இது போன்ற பங்குகளை 49 பேருக்கு மேல் விற்கக் கூடாது. அதற்கு அதிகமாகும் பட்சத்தில் செபியின் வழிகாட்டுதலின் படி அந்த நிறுவனம் பொது அறிவிப்பு வெளியிட வேண்டும்.

தோட்டம் மற்றும் பண்ணை நிறுவனங்கள்:

பல நிறுவனங்கள் பண்ணைகளில் முதலீடு செய்து பணத்தைப் பெருக்குவதாக ஆசை காட்டி திட்டங்களை வெளியிடுகின்றன. இவற்றுள் பல செபியிடம் பதிவு செய்யப்பட்டிருப்பதில்லை. பொதுவாக அவர்கள் முதலீட்டாளர்களின் பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓடி விடுகின்றனர்.

எனவே விரைவாக பணக்காரராக்கும் அல்லது அதிக வருமானம் தரும் திட்டங்கள் சந்தேகத்திற்குரியவை என்பதை நினைவில் கொள்க. மேலும் இந்தத் திட்டங்கள் பாதுகாப்பில்லாதவை, சட்டத்திற்கு புறம்பானவை, அரசால் அங்கீகரிக்கப்படாதவை என்பதையும் உணர வேண்டும். அதாவது நீங்கள் இந்தத் திட்டங்களால் பணத்தை இழந்தால் அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியையும் நாட இயலாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why you should be aware of dubious financial schemes? | அதிக வருமானம், வட்டி தரும் நிதி திட்டங்களா? உஷார் மக்களே உஷார்

There are several dubious schemes operating in the market. The promoters of such schemes float companies with attractive names. They start in a particular area and then, on attaining saturation of member enrollments, keep shifting over to new areas. While promoting the schemes, they get film stars, politicians, sportspersons etc. at grand functions to impress the public. They engage persuasive direct marketing agents, print attractive brochures, release eye-catching advertisements and hoardings and offer gifts to the investors. They also use attractive slogans. They also "honour" their members with titles like Silver Member or Gold Member.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X