சென்னை: நிறுவனங்களில் பணிபுரியும் மாத வருமானம் பெறும் ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பிராவிடண்ட் ஃபண்டிற்காகச் செலுத்துகின்றனர். அதே அளவுத் தொகையை அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்காகச் செலுத்துகின்றன.
ஊழியர்களின் இபிஎஃப் பின் வருமாறு கணக்கிடப்படுகிறது.
இபிஎஃப் = (சம்பளத்திலிருந்து 12 சதவீதம் + டிஏ) + நிறுவனம் (12 சதவீதம் + டிஏ)
இதற்கு முன்பு சம்பளம் என்பது அடிப்படைச் சம்பளம் + டிஏ அதாவது அகவிலைப்படி (டியர்னஸ் அலவன்ஸ்) ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தது. தற்போதுள்ள புதிய ஒழுங்குமுறைபடி, சம்பளம் என்பது அடிப்படைச் சம்பளம் + டிஏ + அலவன்ஸ்கள் போன்றவற்றை உள்ளடக்கி இருக்கிறது.
உதாரணமாக சமீர் என்பவரின் மாத அடிப்படை சம்பளம் ரூ.30,000 என்றும், அவருடைய கன்வேயன்ஸ் அலவன்ஸ் ரூ.5,000 என்றும், அவருடைய மருத்துவ அலவன்ஸ் ரூ.5,000 என்றும் வைத்துக் கொள்வோம். பழைய ஒழுங்குமுறைபடி அவருடைய இபிஎஃப், அடிப்படை சம்பளம் அதாவது ரூ.30,000ஐ மட்டும் கணக்கில் கொண்டு கணக்கிடப்படும்.
அதாவது ரூ.30,000*12/100= ரூ. 3,600
ஆனால் புதிய ஒழுங்குமுறைபடி அவருடைய அடிப்படைச் சம்பளம் மற்றும் கன்வேயன்ஸ் மற்றும் மெடிக்கல் அலவன்ஸ் ஆகியவற்றையும் சேர்த்து இபிஎஃப் கணக்கிடப்படுகிறது.
ரூ.40,000*12/100= Rs 4,800
Share This Article
English summary
How to calculate employees provident fund (epf)? | இந்த பி.எஃப். பணத்தை எப்படி கணக்கிடுகிறார்கள்?
Many of us willingly or unwillingly contribute a certain amount towards employees provident fund (EPF) every month. This is called employee contribution, while an amount will be contributed by your employer, which is referred to as Employer contribution. EPF= Employee (12% of salary + DA) + Employer (12% + DA) Earlier, Salary included basic + DA (dearness allowance). As per the new rules, ‘salary' will include basic + DA + allowances that are uniformly paid to employees.
Story first published: Monday, December 29, 2014, 15:38 [IST]