
டிவிடெண்ட் தொகை என்பது என்ன ?
பொதுவாக, அதிகமாக டிவிடெண்ட் தரும் நிறுவனப் பங்குகளை வாங்குவது சிறப்பு. சரி, ஒரு உதாரணம் மூலமாக லாபத் தொகையை எப்படி கணக்கிடுவது என்பதைப் பார்ப்போம்.
ஏ என்னும் நிறுவனப் பங்கு, 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதில் ஒரு 10 பங்கினை வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
பங்கு வாங்க செய்யும் முதலீட்டுத் தொகை = ரூ 100 X 10 = ரூ.1000
அந்த நிறுவனம், ஒரு பங்கிற்கு, ஒரு ரூபாய் லாபத் தொகையை நிர்ணயிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
ஆக, 10 பங்கிற்கு, 10 ரூபாய் லாபத் தொகையாக கிடைக்கிறது.
1000 ரூபாய் முதலீடு செய்ததற்கு 10 ரூபாய் லாபம். அதாவது 1 சதவிகிதம் லாபம் கிடைத்துள்ளது.
பொதுவாக, ஒரு தொகையை முதலீடு செய்யப் போகிறோம் என்றால், அந்த முதலீடு வங்கி வட்டியில் கிடைக்கும் லாபத்தை விட அதிகமாக இருக்க வேண்டும் என்று முதலீட்டாளர்கள் நினைப்பர். வங்கி வட்டியை விட குறைவாகவோ அல்லது அதே அளவிற்கு இருந்தால், வங்கியில் போடுவது பாதுகாப்பான முதலீடாக தோன்றுவது இயல்பு.
பங்கு வாங்கி ஆறே மாதத்தில் லாபப்பங்குத் தொகை கிடைத்தால், அது இரட்டை லாபமாக கருதப்படுகிறது.
பங்குச் சந்தையில், பல நிறுவனங்கள் அதிக லாபப் பங்குத்தொகை வழங்குகின்றனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பொதுத் துறை வங்கிகளைச் சொல்லலாம். இந்தப் பங்குகள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன, அதிக லாபப் பங்குத் தொகையும் வழங்குகின்றன.
ஆந்திரா வங்கி, ஐடிபியை வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி போன்ற வங்கிகள் அதிக லாபத் தொகை வழங்கும் வங்கிகளில் சில.
பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம், நேரத்திற்கேற்ப பங்குகளின் விலை ஏறுவதோடு மட்டுமல்லாமல், அந்தப் பங்கிற்கான லாபத் தொகையும் கிடைக்கிறது.
நிறுவனத்தின் லாபம் மற்றும் இயக்குனர்களின் பரிந்துரையைப் பொறுத்து, எவ்வளவு லாப பங்குத் தொகை வழங்குவது என்பது தீர்மானிக்கப்படுகிறது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் லாபத் தொகை வழங்குவதில்லை.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications