ஸ்மார்ட்போனை எப்படி கிரெடிட்-டெபிட் கார்டு ரீடர்களாக அல்லது பிஓஎஸ் இயந்திரங்களாக மாற்றலாம் என்று இங்குப் பார்ப்போம்.
பெரும் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து டிஜிட்டல் பண பரிவத்தனை செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி வருகின்றது. மேலும் பனமில்லா பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக பல விளம்பரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதனால் பல வியாபாரிகள் பேடிஎம் போன்ற செயலிகள் மற்றும் பாயிண்ட் ஆப் சேல்(பிஓஎஸ்) இயந்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்தி கட்டணங்களை பெறுவது அதிகரித்து வருகின்றது.
வங்கிகளும் அதற்காக பிஓஎஸ் இயந்திரங்களை அதிகளவில் விற்கத் துவங்கியுள்ளது. ஒரு பக்கம் செயலிகள் பதிவிறக்கும் அதிகர்த்து வரும் நிலையில் உங்களது ஸ்மார்ட்போனை எப்படி கிரெடிட்-டெபிட் கார்டு ரீடர்களாக அல்லது பிஓஎஸ் இயந்திரங்களாக மாற்றலாம் என்று இங்குப் பார்ப்போம்.
ஸ்மார்ட்போன் - கார்டு ரீடர்
வியாபாரிகள் உங்கள் ஸ்மார்ட்போனை கார்டு ரீடராக மாற்ற மொபைல் செயலியை பதிவிறக்கி அதற்கு ஏற்ற கார்டு ரீடர் ஒன்றை வாங்க வேண்டும்.
செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவிய உடன் கார்டு ரீடரை இணைத்துவிட்டு செயலியில் எவ்வள பணம் என்று உள்ளிட வேண்டும்.
பின்னர் உங்களது வாடிக்கையாளர்களின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டினை கார்டு ரீடரில் ஸ்வைப் செய்தபின் கார்டின் பின் எண்ணை உள்ளிட்டவுடன் பரிவர்த்தனை முடிந்துவிடும்.
எனவே இங்கு நாம் இந்தியாவில் ஸ்மார்ட்போன் மூலம் கிரெடிட், டெபிட் கார்டு ரீடர் பரிவர்த்தனை சேவைகளை அளிக்கும் செயலிகள் மற்றும் சாதனங்கள் பற்றிப் பார்ப்போம்.
இபைசா(epaisa)
இ-பைசா என்ற செயலியின் மூலம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் இருந்து பணத்தை பெறலாம்.
இபைசா செயலியுடனான கார்டு ரீடரை இணைக்கக் குறைந்தது மாதம் 199 ரூபாய் முதல் 999 ரூபாய் வரை கட்டணமாக செலுத்த வேண்டி வரும்.
அது மட்டும் இல்லாமல் முதன் முதலாகத் துவக்க கட்டணமாக 3,500 ரூபாய் செலுத்த நேரிடலாம். இந்தக் கட்டணம் நீங்கள் தேர்ந்து எடுக்கும் மாத திட்டத்தை பொருத்து குறையும்.
எம்பிஓஎஸ்
எம்பிஓஎஸ் சேவையை ஸ்மார்ட் போனில் பயன்படுத்த எம்ஸ்வைப் என்ற செயலியை பதிவிறக்க வேண்டும். இந்தச் செயலியின் மூலம் கார்டு ரீடர்களை இணைத்துப் பயன்படுத்த 2000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை தொடக்க கட்டணமாகவும், மாதம் 30 ரூபாய் சேவை கட்டணமாகவும் வசூலிக்கப்படுகின்றது.
பேபிஓஎஸ்
இந்தச் செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் பதிவிறக்குவதன் மூலம் நேரடியாக வாடிக்கையாளர் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்று உள்ளிட்ட பிறகு கார்டு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.
உடனே இந்த செயலி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மூன்று நாட்களில் உங்கள் கணக்கில் பணத்தைச் செலுத்திவிடும்.
சர்க்கில் இட் அப் மற்றும் பேபால்
ஸ்மார்ட்போனை பிஓஎஸ் இயந்திரமாகப் பயன்படுத்தக்கூடிய செயலிகள் மற்றும் கார்டு ரீடர்களை விரைவில் பேபால் நிறுவனங்கள் இந்தியாவில் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications