நிதிச் சந்தை ஒரு பெரிய உலகம். இதில் நுழைந்து எந்த விதமான சேதாரமும் இல்லாமல் வெளிவருவது ஒரு பெரிய கலை. இந்த மாய உலகில் வெற்றி பெற பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னெவெனில் எந்த ஒரு அம்சமும் மிகச் சிறந்தது அல்ல, இது மட்டுமே வெற்றி பெற ஒரே வழி என எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. இங்கு வெற்றி பெற பல்வேறு வழிமுறைகள் உள்ளன. சிலர் பொருளாதார வல்லுநர்களின் அறிவுரையை அப்படியே இம்மி பிசகாமல் கடைப்பிடித்து வெற்றி பெறுகின்றனர். பலர், வல்லுநர்களின் அறிவுரையைப் புறந்தள்ளி விட்டு தனக்கு எது சரி என்று தோன்றுகின்றதோ அதைக் கடைப்பிடிக்கின்றனர். எது எதுவாயினும் நிதிச் சந்தையில் உங்களுக்கான வழியைத் தேர்ந்தெடுக்க அந்தச் சந்தையைப் பற்றிய அடிப்படை அறிவு நமக்கு மிகவும் அவசியம். எனவே நாம் நிதிச்சந்தையில் உள்ள மிக அடிப்படை விஷயமாகிய டீமேட் கணக்குகளைப் பற்றிய பலவேறு விபரங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகின்றோம்.
பெரும்பாலான நிதிச் சந்தை வல்லுநர்கள், சிறு முதலீட்டாளர்கள் பங்கு முதலீட்டில் முதலீடு செய்ய விரும்பினால், நேரிடையாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை விடப் பரஸ்பர நிதி மூலம் முதலீடு செய்வது மிகவும் சிறந்தது என அறிவுறுத்துகின்றனர். நிதி வல்லுநர்களின் அறிவுரை இவ்வாறு இருப்பினும், கடந்த நிதியாண்டில் பங்குச் சந்தை மிகச் சிறப்பாகச் செயல்பட்ட காரணத்தினால், மிக அதிக அளவிலான சிறு முதலீட்டாளர்கள் உற்சாகமாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கின்றனர்.
சமீபத்திய பொருளாதார அறிக்கையின் படி, மார்ச் 31, 2018 உடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டில் சுமார் 3.76 மில்லியன் புதிய டிமேட் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. முந்தைய சாதனை ஆண்டான 2007-08 ஆம் ஆண்டில் சுமார் 3 மில்லியன் புதிய டீமேட் கணக்குகள் திறக்கப்பட்டன. எனவே 2017-18ம் நிதியாண்டு புதிய சாதனை ஆண்டாகக் கருதப்படுகின்றது.
பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வதன் மூலம் நிதிச் சந்தையில் நீங்கள் நேரிடையாகப் பங்கு பெற விரும்பினால், நீங்கள் ஒரு ஆன்லைன் தரகு அல்லது டிமேட் கணக்கைத் திறக்க வேண்டும். அதன் பிறகே நீங்கள் பங்குகளில் நேரிடையாக முதலீடு செய்ய இயலும். எனவே நீங்கள் ஒரு டீமேட் கணக்கை துவங்கும் முன்னர் அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களையும் நாங்கள் இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
புரோக்கரிங் கணக்கு வகைகள்
ஆன்லைனில் முதலீடு செய்ய, உங்களுக்கு ஒரு ப்ரோக்கரிங் கணக்கு தேவை. இதை நீங்கள் ஹெச்டிஎப்சி செக்யூரிட்டீஸ், ஐசிஐசிஐ டைரக்ட், ஆக்சிஸ் டைரக்ட், பையர்ஸ், மற்றும் ஸீரோதா போன்ற ப்ரோக்கரிங் நிறுவனங்களை அணுகுவதன் மூலம் திறக்க முடியும்.
இந்த ப்ரோக்கரிங் நிறுவனங்கள் ஒரு தள்ளுபடி தரகு நிறுவனம் அல்லது ஒரு சேவை தரகு நிறுவனம் ஆகிய இரண்டில் ஒன்றாக மட்டுமே இருக்க முடியும். இந்த இரண்டு தரகு நிறுவனங்கள் வழங்கும் முதலீடு வாய்ப்புகள் மற்றும் சேவைகளின் வரம்பு ஆகியவற்றில் வேறுபாடுகள் உள்ளன. ஒரு தள்ளுபடி தரகு நிறுவனம் ஒரு முதலீட்டாளரின் வர்த்தக வழிமுறைகளை அமுல்படுத்துகின்றது. அந்த நிறுவனம் பங்குகள் மற்றும் அதனுடைய டிரவேடிவ்களில் முதலீடு செய்ய முதலீட்டாளரை அனுமதிக்கும். அதே நேரத்தில் ஒரு சேவை தரகு நிறுவனம், தள்ளுபடி நிறுவனம் வழங்கும் அனைத்து வாய்ப்புகளையும் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதோடு, அதை விடக் கூடுதலாக, ஆரம்பப் பொதுப் பங்குகள் (IPO கள்), பரஸ்பர நிதிகள் மற்றும் காப்பீடு ஆகியவற்றில் முதலீடு செய்யும் வாய்ப்புகளைத் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்தச் சேவை தரகு நிறுவனங்கள் பல்வேறு பங்குகள் மற்றும் துறைகளில் ஆராய்ச்சி அறிக்கைகளைத் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. பெரும்பாலான ப்ரோக்கிங் நிறுவனங்கள் சேவை தரகு நிறுவனங்களாக இருக்கின்றன.
சமீப காலங்களில் அதிகரித்து வரும் IPO களின் காரணமாக நீங்கள் அதில் முதலீடு செய்ய விரும்பினால் சேவை தரகு நிறுவனங்களின் மூலம் முதலீடு செய்வது மிகவும் எளிது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
கணக்குகளைத் தொடங்குவது
முதலீடு செய்வதற்கு, உங்களுக்கு மூன்று விதமான கணக்குள் தேவைப்படும் அதாவது உங்களுக்கு ஒரு வங்கி கணக்கு, ஒரு வர்த்தகக் கணக்கு மற்றும் டிமேட் கணக்கு. ஆகிய மூன்றும் இருக்க வேண்டும். டிமேட் கணக்கு டிரேடிங் கணக்கின் நெருக்கமான உறவினர் ஆவார். ஒரு டிமேட் கணக்கு என்பது டிஜிட்டல் வடிவத்தில் பத்திரங்களை வைத்திருப்பதற்கான ஒரு கடை மட்டுமே. ஒரு வர்த்தகக் கணக்கு மூலம், நீங்கள் பங்குகள், ஐபிஓக்கள், பரஸ்பர நிதிகள், தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். முதலீடு செய்த பத்திரங்களை நீங்கள் டிஜிட்டல் வடிவில் ஒரு டிமேட் கணக்கில் சேமித்து வைத்திருக்கலாம்.
டீமேட் கணக்கில் உள்ள பத்திரங்கள் டெபாசிட்டரி பங்குதாரர் (டி.பி.) என்பவரால் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் இரண்டு டிபி க்கள் உள்ளன: தேசிய டிபாசிட் லிமிடெட் (என்.எஸ்.டி.எல்) மற்றும் மத்திய வைப்புத்தொகை சேவைகள் இந்தியா சி.டி.எஸ்.எல். இவை இரண்டும் உங்களுடைய டிமேட் கணக்கை பாதுகாப்பாக வைத்திருக்கும் டி.பிக்களாகச் செயல்படுகின்றன. உங்கள் ப்ரோக்கிங் நிறுவனம் இந்த இருவரில் ஒருவரோடு இணைந்து செயல்படும். இந்த இரண்டு டி.பீ.சிக்ளின் சேவைகளுக்கு இடையில் எந்த விதமான வித்தியாசமும் இல்லை.
நீங்கள் ஒரு தரகு கணக்கை ஆன்லைனில் தொடங்கலாம். அவ்வாறு செய்யும் பொழுது நீங்கள் ஒரு வர்த்தக மற்றும் டிமேட் கணக்கை ஆன்லைனில் தொடங்குவதாக அர்த்தம். ஆனால் எதிர்காலத்தில் மாற்றக்கூடிய ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின் படி நீங்கள் சட்ட வடிவத்தில் பவர் ஆப் அட்டர்னி (POA) ஐ பத்திர வடிவில் கையெழுத்திட வேண்டும். அதோடு நீங்கள் ஒரு ஆன்லைன் கணக்கை தொடங்க விரும்பினால் உங்களுடைய ஆதார் அடையாள அட்டை ஒரு மிக முக்கியமான மற்றும் கட்டாயமான ஆவணமாகக் கருதப்படுகின்றது எனத் திருத் தேஜாஸ் கோடெய், பையர்ஸ், ஒரு தொழில்நுட்ப கவனம் சார்ந்த பங்கு வர்த்தக நிறுவனம், இணை நிறுவனர், தெரிவிக்கிறார்.
ஒன்றில் மூன்று கணக்கில் ஏற்படக் கூடிய நிதி ஓட்டம்
* உங்கள் வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து பங்கு வர்த்தகக் கணக்குக்கு நிதிகளை நீங்கள் மாற்றிக் கொள்கிறீர்கள்.
* தனித்துவமான ஐடியை கொண்டிருக்கும் உங்களுடைய வணிகக் கணக்கிலிருந்து, நீங்கள் வர்த்தகம் செய்யலாம். அதாவது, நீங்கள் பத்திரங்களை வாங்கவோ அல்லது விற்கவோ முடியும்.
* பங்குகளின் வர்த்தகம் உங்களுடைய டிமாட் கணக்கில் குறிக்கப்படும். டிமேட் கணக்கு என்பது நீங்கள் பங்கு வாங்கும் பொழுது வரவு வைக்கப்படும் இடமாகவும், அதை விற்கும் பொழுது அதைக் கழிக்கும் இடமாகவும், சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் இது பங்கு பரிவர்த்தனைகளைக் கையாளும் ஒரு வங்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. ,
ஒரே இடத்தில் வர்த்தகம் மற்றும் டிமேட் கணக்குகளை வைத்திருப்பது
ஒரே நிறுவனத்தில் நீங்கள் வைத்திருக்கும் வர்த்தக மற்றும் டீமாட் கணக்கு உங்களுக்கு உதவுமா? ஒரே நிறுவனத்தில் வர்த்தக மற்றும் டீமேட் கணக்கு இல்லாமல் இருந்தால் என்ன நடக்கும்?இந்த இரு கேள்விகளும் ஒரு முதலீட்டாளர்களுக்குக் கண்டிப்பாக எழும். சிரமமில்லாமல் பங்குகளில் முதலீடு செய்ய ஒன்றில் மூன்று கணக்கு உங்களுக்கு உதவும். உதாரணமாக, நீங்கள் ஏபிசி வங்கியில் சேமிப்புக் கணக்கு மற்றும் டிமேட் கணக்கை தொடங்குகின்றீர்கள். அதன் பிறகு வர்த்தகக் கணக்கை நீங்கள் XYZ ப்ரோகிங் ஹவுசில் திறக்கின்றீர்கள். அதன் பின்னர் முதலீடு செய்ய, உங்களுடைய வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து வர்த்தகக் கணக்கிற்குப் பணத்தை மாற்ற வேண்டும். இதற்குச் சிறிது நேரம் பிடிக்கும். அந்தக் காலத் தாமத்தால் பங்குச் சந்தையில் நீங்கள் ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பை இழக்க நேரிடலாம். அதோடு உங்களுடைய வங்கி சேமிப்புக் கணக்கில் உங்களுக்குக் கிடைக்கும் வட்டி வருவாயை இழக்க நேரிடலாம். அதோடு உங்களுடைய டீமேட் கணக்கில் இருந்து வர்த்தகக் கணக்கிற்குப் பங்குகளை மாற்றும் பொழுது பல்வேறு இடையூறுகளைச் சந்திக்க நேரிடலாம். என ஆக்ஸிஸ் டைரக்ட தன்னுடைய மின்னஞ்சலில் பதில் அளித்துள்ளது.
ஒரே நிறுவனத்தில் ஒன்றல் மூன்று கணக்கு வைத்திருக்கும் பொழுது, நீங்கள் வங்கியில் உள்ள காசோலைக்கு ஒப்பான ஒரு விநியோக கட்டளை ஸ்லிப் (டிஐஎஸ்) பயன்படுத்தி ஒரு நிறுவனப் பங்குகளை ஆப்லைனில் வாங்க அல்ல விற்க முடியும். "ஒரே நிறுவனத்தில் மூன்றில் ஒன்று கணக்கு இல்லையெனில் உங்களால் டி.ஐ.சியில் கையொப்பமிடுவதைத் தவிர்க்க இயலாது. நீங்கள் ஒவ்வொரு முறையும் வர்த்தகத்தில் ஈடுபடும் பொழுது டிஐஎஸ் ல் கையொப்பம் இட்டால் மட்டுமே டி பீல் இருந்து பங்குகளை வர்த்தக நிறுவனக் கணக்கிற்கு மாற்ற இயலும். இதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், உங்களுடைய பங்குகள் ஏலத்தில் விடப்படும். அதனால் ஏற்படும் நஷ்டத்தை விவரிக்க இயலாது. அதோடு இரண்டு இடங்களில் உங்களுக்குக் கணக்கு இருந்தால் இரண்டு இடங்களிலும் நீங்கள் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும். என அச்சின் கோயல் பொனான்ஸோ நிதி நிறுவனத்தின் மேலாளர் தெரிவிக்கின்றார்.
கட்டணங்கள்
எந்த ஒரு ப்ரோக்கரிங் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் முன்னர் அந்த நிறுவனத்தின் கட்டணம், தரகு கட்டணம் போன்றவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். இதோடு அந்த நிறுவனத்தில் கணக்கு தொடங்க ஆரம்பக் கட்டணங்கள் மற்றும் வருடாந்திர பராமரிப்புக் கட்டணம், மற்றும் பரிவர்த்தனைக் கட்டணங்கள் ஆகியனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். "ஒரு தரகு கணக்கு திறக்கும் போது, பல்வேறு ஒரு முறை மட்டுமே செலுத்த வேண்டிய கட்டணம் மற்றும் தொடர்ச்சியான கட்டணங்கள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். அதோடு நிறுவனங்களுக்கு இடையே பரந்த அளவில் வேறுபடும் பரிவர்த்தனைக் கட்டணங்கள் பற்றியும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பெரும்பாலான தரகு நிறுவனங்கள் பல்வேறு பரிவர்த்தனைப் பிரிவுகளுக்கு வெவ்வேறு கட்டணங்களை வசூலிக்கிறார்கள், இது மிகவும் குழப்பமானதாக இருக்கும். எனவே நீங்கள் அனைத்து வகையான பரிவர்த்தனைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட நிலையான கட்டணத்தை வசூலிக்கும் ஒரு தரகு நிறுவனத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பல்வேறு தரகு கட்டணங்களை நினைத்து வருந்துவதைத் தவிர்த்து, நீங்கள் உங்களுடைய பங்கு பரிவர்த்தனையில் அதிகக் கவனத்தைச் செலுத்த முடியும். எனக் கோஹ்டே தெரிவிக்கின்றார்.
நீங்கள் ஒவ்வொரு முறை பங்குகளை வாங்கும் பொழுதும், விற்கும் பொழுதும் பரிவர்த்தனை கட்டணத்தைச் செலுத்துகின்றீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, இதை நினைவில் வைத்து நீங்கள் அடிக்கடி வர்த்தகத்தில் ஈடுபடலாமா அல்லது நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யப் போகிறீர்களோ இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும். சில்லறை முதலீட்டாளராகிய நீங்கள், வர்த்தகத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்து நீண்ட கால நோக்கில் முதலீடு செய்வது நல்லது. ப்ரோக்கிங் நிறுவனங்கள் பங்கு முதலீட்டுத் திட்டங்களுக்குப் பல்வேறு வகையிலான சலுகை விலை திட்டங்களை வழங்குகின்றன. உதாரணமாக, பரிவர்த்தனையின் மதிப்பில் 0.5 சதவீதம் அல்லது குறைந்த பட்சம் ரூ 25 ஐ கட்டணமாகப் பல்வேறு ப்ரோக்கரிங் நிறுவனங்கள் வசூலிக்கின்றன.
உங்கள் தேவைக்கு ஏற்ற ப்ரோக்கரிங் நிறுவனத்தின் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும். இதில் மிகவும் அடிப்படையான திட்டம் என்பது நிலையான விலை திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தில், வர்த்தகத்தின் அளவைப் பொருட்படுத்தாமல், தரகு கட்டணம் நிலையாக ஒரே மாதிரியாக உள்ளது. மற்றொன்று பரிவர்த்தனை தொகுதியுடன் இணைக்கப்பட்ட விலையிடல் திட்டம் ஆகும். இதில் வர்த்தக வரம்பு அதிகரித்து ஒரு நிலைக்கு மேல் சென்று விட்டால் தரகு கட்டணம் குறையத் தொடங்கும். இது அதிக எல்லை வரம்புக்குட்பட்டுப் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நபர்களுக்கு மிகவும் உகந்தது. எடுத்துக்காட்டாக, ஒரு வருட வர்த்தகத்தின் மதிப்பு 25 லட்சத்திற்கும் குறைவானதாக இருந்தால், தரகு கட்டணம் 0.75 சதவிகிதமாக இருக்கக்கூடும், வர்த்தக அளவு இந்த எல்லையைத் தாண்டினால் தரகு கட்டணம் 0.5 சதவிகிதமாகக் குறைந்துவிடும். சில நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர் தரகு நிறுவனத்திற்கு முன்கூட்டியே தரகு கட்டணத்தைச் செலுத்தி விடுவார். அந்த வாடிக்கையாளர் ஒவ்வொரு முறை வர்த்தகத்தில் ஈடுபடும் பொழுது அவருக்குக் கட்டணச் சலுகை அந்தத் தரகு நிறுவனத்தினால் வழங்கப்படும். வணிகர்களுக்குப் பெரும்பாலான தரகு நிறுவனங்கள் வர்த்தகத்தின் அளவு மற்றும் வர்த்தக நிதி அடிப்படையில் சிறப்பு விலைச் சலுகைகளை வழங்குகின்றன
பரிவர்த்தனைகளின் வகையைப் பொறுத்து தரகு கட்டணம் மாறுபடும், ஆனால் ஒரு டீமாட் கணக்கைத் தேர்ந்தெடுக்கும்போது ஒரு வர்த்தகர் அல்லது முதலீட்டாளர்களுக்கு இந்தத் தரகு கட்டணம் என்பது மிகவும் முக்கியமான விஷயமா? இல்லவே இல்லை. ஒரு நாளின் முடிவில், முதலீட்டாளர்களாகிய நீங்கள் நீண்ட கால நோக்கில் அல்லது குறுகிய கால நோக்கில் முதலீடு செய்யும் பொழுது உங்களுடைய டீமேட் கணக்குப் பணத்தைச் சேமிக்க உதவ வேண்டும். அது எந்தவிதமான கணக்காக இருந்தாலும். செலவு மற்றும் சேமிப்பு ஆகிய இரண்டு மட்டுமே முதலீட்டாளர்களுக்கு மிகவும் முக்கியம். எனத் திருக் கோஹ்டே தெரிவிக்கின்றார்.
ஆவணங்கள்
ஒரு வர்த்தகக் கணக்கு திறக்கும் போது, விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்திச் செய்வதை விடக் கூடுதலாக, நீங்கள் ஒரு சில பத்திரங்களில் கையொப்பமிட வேண்டும். அதாவது நீங்கள் வர்த்தக நிறுவனத்திற்குப் பவர் ஆப் அட்டர்னி வழங்க வேண்டும். இந்தப் பவர் ஆப் அட்டர்னி வரம்புகளின் நோக்கங்களுக்காகவும், பத்திரங்கள் மற்றும் நிதிகளின் தீர்வுக்காகவும், வாடிக்கையாளர் வங்கி கணக்கிலிருந்து மற்றும் தரகர் / டி.பி. பி.ஏ.ஏ நிறுவன வங்கி மற்றும் டிமேட் கணக்கிற்குப் பத்திரங்களை மாற்ற அதிகாரமளிக்கின்றது. இந்தப் பவர் ஆப் அட்டர்னி மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. எனவே பவர் ஆப் அட்டர்னி வழங்கும் பொழுது அந்தத் தரகு நிறுவனத்தின் ஊழியருக்குச் செய்யாமல் அந்த நிறுவனத்திற்கு வழங்குவதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமானது.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்
ஒரு முதலீட்டின் அடிப்படை விதிகளை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், நீண்ட கால நோக்கில் பங்குகளில் முதலீடு செய்வது நல்லது. குறுகிய கால நலன்களுக்காக ஆசைப்பட்டு நஷ்டத்தைச் சந்திக்காதீர்கள். உங்களுக்கு நன்கு பரிச்சயமான முடிவுகளை எடுக்கவும், நீங்கள் ஒரு பங்கினை வாங்கிய காரணங்கள் மாற்றப்படாதவரை அந்தப் பங்குகளை விற்காதீர்கள்.