பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ வித்தியாசம் இவ்வளவு தான்..!

பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ இடையேயான மிக முக்கிய வேறுபாடுகள்..!

பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில், பங்குச் சந்தைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. பங்குச் சந்தையின் வளர்ச்சி, அந்த நாட்டின் பொருளாதார அளவுகோலாக கருதப்படுகின்றது. எனவே ஒவ்வொரு நாடும் தங்கள் பங்குச் சந்தையை பொக்கிஷம் போல் பாதுகாக்கின்றன. அவை அந்த நாடுகளின் மதிப்பு மிக்க அடையாளமாக கருதப்படுகின்றன.

இந்தியாவிலும் அத்தகைய சிறப்பு வாய்ந்த இரண்டு பங்குச் சந்தைகள் உள்ளன. அவை மும்பை பங்குச் சந்தை (பி எஸ் சி)மற்றும் தேசிய பங்குச் சந்தை (என் எஸ் சி) ஆகும்.

பி எஸ் சி மற்றும் என்எஸ்இ ஆகிய இரண்டு சந்தைகளும் பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்றவற்றை கையாளுவதாக நமக்கு நன்கு தெரியும். இருந்தாலும், இந்த இரண்டு பங்குச் சந்தையைப் பற்றிய அனைத்து விபரங்களயும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

பிஎஸ்இ என்பது என்ன?

பிஎஸ்இ என்பது என்ன?

1875 ஆம் ஆண்டில், பிஎஸ்இ அல்லது பாம்பே பங்குச் சந்தை நிறுவப்பட்டது. இது நிறுவப்பட்ட காலத்தில் 'சொந்த பங்கு மற்றும் பங்கு தரகர்கள் சங்கம்' என்று அழைக்கப்பட்டது. இருப்பினும், 1957 க்குப் பிறகு, இந்திய அரசாங்கம், பத்திரங்களின் ஒப்பந்த விதிமுறைச் சட்டம் 1956 இன் கீழ், இந்தச் சந்தையை இந்தியாவின் முதன்மையான பங்கு பரிவர்த்தனை சந்தையாக அங்கீகரித்தது.

இந்த பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1986 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப் பட்டது. இந்தக் குறியீட்டெண் முதல் 30 நிறுவனங்களை அடையாளம் காண உதவும் குறியீடாக பயன்படுத்தப்படுகின்றது.

1995 ஆம் ஆண்டில், பி.எஸ்.இ.இ.இன் ஆன்லைன் வர்த்தகம் (பி.எல்.டி.டி) நிறுவப்பட்டது. அது நிறுவப்பட்ட அந்த சமயத்தில் அதனுடைய திறன் ஒரு நாளைக்கு 8 மில்லியன் பரிவர்த்தனைகள் என்கிற அளவில் இருந்தது. .

பிஎஸ்இ என்பது ஆசியாவின் முதல் பங்குச் சந்தையாகும். இந்தச் சந்தை, சந்தை தரவு சேவைகள், பேரிடர் மேலாண்மை, CDSL (மத்திய வைப்புத்தொகை சேவைகள் லிமிடெட்), டெபாசிட்டரி சேவைகள் போன்ற பல்வேறு சேவைகளை வழங்குகிறது.

மும்பை பங்குச் சந்தை உலகில் உள்ள சந்தைகளில் 12 வது மிகப்பெரிய பங்குச் சந்தையாகும். ஜூலை 2017 வரை, இந்தச் சந்தையின் மூலதனம் 2 டிரில்லியன் டாலர் ஆகும்.

 

என்எஸ்இ என்பது என்ன?

என்எஸ்இ என்பது என்ன?

என்எஸ்இ அல்லது தேசிய பங்குச் சந்தை மும்பையில் உள்ளது. இது இந்தியாவின் முன்னணி பங்குச் சந்தை ஆகும். இது 1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தச் சந்தை ஆரம்பிக்கப்பட்ட பொழுது, மின்னணு பரிவர்த்தனை முறையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்தச் செய்கை காகித அடிப்படையிலான அமைப்பை அகற்ற வழிவகுத்தது.

இந்தச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி என அழைக்கப்படுகின்றது. இது சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள முதல் 50 நிறுவங்களின் மதிப்பை உணர்த்தும் அடையாளமாக விளங்குகின்றது. 1996 ஆம் ஆண்டில் நிஃப்டி 50 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய பங்குச் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் ஒரு காரணியாக இந்த நிப்டி, இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்களால் பயன்படுத்தப்படுகின்றது.

தேசிய பங்குச் சந்தை ஒரு அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தையாக 1993 ஆம் ஆண்டில் உருவெடுத்தது. 1992 ஆம் ஆண்டில் இது பத்திரச் சீர்திருத்த சட்டம், 1956 இன் கீழ் வரி செலுத்தும் நிறுவனமாக இணைக்கப்பட்டது.

NSDL (தேசிய பாதுகாப்பு பத்திரங்கள் லிமிடெட் லிமிடெட்) 1995 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பொழுது, அது முதலீட்டாளர்கள் தங்கள் பத்திரங்கள் மற்றும் பங்குகளை மின்னணு முறையில் மாற்றுவதற்கும், வைத்திருப்பதற்கும் ஒரு பாதுகாப்பான தளத்தை வழங்கத் தொடங்கியது.

தேசிய பங்குச் சந்தை என்பது 10 வது மிகப் பெரிய பங்குச் சந்தை சந்தை ஆகும். மார்ச் 2017 நிலவரப்படி இதனுடைய சந்தை மூலதனம் 1.41 டிரில்லியன் டாலராக உள்ளது.

 

 முக்கிய வேறுபாடுகள்

முக்கிய வேறுபாடுகள்

• தேசிய பங்கு சந்தை மற்றும் பாம்பே பங்குச் சந்தை ஆகிய இரண்டும் இந்தியாவின் முன்னணி பங்குச் சந்தைகளாகும். இருப்பினும், இதில் பிஎஸ்இ மிகவும் பழமையானது. ஆனால் என்.எஸ்.இ என்பது ஒப்பீட்டளவில் புதியது.

• உலகளாவிய பங்குச் சந்தைகளில் பம்பாய் பங்குச் சந்தை 10 வது இடத்திலும், ​​தேசிய பங்குச் சந்தை 11 வது இடத்திலும் உள்ளது.

• 1992 ஆம் ஆண்டில் என்எஸ்இ எலக்ட்ரானிக் பரிமாற்ற முறையை அறிமுகப்படுத்தியது. பி.எஸ்.இ யின் மின்னணு முறைமை, 1995 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

என் எஸ் சி யின் குறியீட்டெண் நிப்டி ஆகும். பி எஸ் சியின் குறியீட்டெண் சென்செக்ஸ் ஆகும் நிப்டி முதல் 50 நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டது. சென்செக்ஸ் முதல் 30 நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டது.

• பி.எஸ்.இ. 1957 இல் அங்கீகாரம் பெற்ற பங்குச் சந்தையாக மாறியது, என் எஸ் சிக்கு 1993 இல் அங்கீகாரம் கிடைத்தது.

 

பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ இடையிலான வேறுபாடுகள்

பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ இடையிலான வேறுபாடுகள்

1) இந்தியாவின் மிகப்பெரிய பங்குச் சந்தையாக என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ உள்ளன.

2) 1875 ஆம் ஆண்டில் பிஎஸ்இ நிறுவப்பட்டது. 1992ம் ஆண்டில் என்எஸ்இ நிறுவப்பட்டது.

3) தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி ஆகும். பி எஸ் சிக்கு சென்செக்ஸ் குறியீட்டெண் ஆக உள்ளது. என் எஸ் சியில் சுமார் 1696 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. என் எஸ் சியில் சுமார் 5749 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

4) உலகளாவிய அளவில் இவை இரண்டும் முறையே 11 மற்றும் 10 வது இடத்தில் உள்ளன.

 

தீர்மானம்

தீர்மானம்

இந்தியப் பங்குச் சந்தைகளைப் பொருத்த வரை தேசிய பங்குச் சந்தை மற்றும் பாம்பே பங்குச் சந்தை ஆகிய இரண்டும் மிக முக்கியமான இடத்தில் உள்ளன. ஒவ்வொரு நாளும், நூற்றுக்கணக்கான பங்கு தரகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்த பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். இந்த இரண்டு சந்தைகளும் மும்பையில் நிறுவப்பட்டுள்ளன. இவை இரண்டும் மஹாராஷ்ட்ரா அரசாங்கம் மற்றும் செபி (இந்தியாவின் செக்யூரிட்டிஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போர்டு) யால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+