நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய புதிய IPO விதிகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்கு சந்தையில் கடந்த சில ஆண்டுகளாக நிறுவனங்கள் பங்கு சந்தையில் நுழைவது என்பது கணிசமாக அதிகரித்துள்ளது.

எனினும் சில நிறுவனங்கள் கடந்த ஆண்டில் வெளியீட்டு விலைக்கு மேலாக செல்லவில்லை. மாறாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன. இதற்கு ஓவர் வேல்யூ என்பதே காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கணித்திருந்தனர்.

ஈஷா அம்பானி-யின் டிவின்ஸ் குழந்தைகளின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?! ஈஷா அம்பானி-யின் டிவின்ஸ் குழந்தைகளின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?!

எத்தனை ஐபிஓ?

எத்தனை ஐபிஓ?

ஜனவரி 21ல் இருந்து மட்டும் 90-க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் 2021ம் ஆண்டில் 63 நிறுவனங்கள் பங்கு சந்தையில் நுழைந்துள்ளன. இந்த நிறுவனங்கள் பங்கு வெளியீட்டின் மூலம் 1.20 லட்சம் கோடி ரூபாய் நிதியினை திரட்டியுள்ளன.

நடப்பு ஆண்டு நிலவரம் எப்படி?

நடப்பு ஆண்டு நிலவரம் எப்படி?

எனினும் நடப்பு ஆண்டில் சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மந்த நிலை இருந்து வருகிறது. இது சர்வதேச அளவிலான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் பங்கு சந்தைக்குள் நுழைவது சரிவினைக் கண்டுள்ளது. இதன் காரணமான நடப்பு ஆண்டில் வெறும் 31 நிறுவனங்கள் மட்டுமே பங்கு சந்தைக்குள் நுழைந்துள்ளன. இதன் மூலம் 55 ஆயிரம் கோடி ரூபாய் நிதியினை திரட்டியுள்ளன.

10 ஆண்டு நிலவரம்?
 

10 ஆண்டு நிலவரம்?

இந்த பங்கு வெளியீட்டு விகிதமானது கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிகம் என்றே கூறலாம். 2012 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் ,அதிகபட்சமாக 2017ம் ஆண்டில் 38 நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதே 2013ல் வெறும் 3 நிறுவனங்கள் மட்டுமே பங்கு சந்தைக்குள் நுழைந்தன. இந்த நிலையில் 2021ல் 63 நிறுவனங்களும், நடப்பு ஆண்டில் இதுவரையில் 31 நிறுவனங்களும் நுழைந்துள்ளன.

ஸ்டார்ட் அப்களின் என்ட்ரி

ஸ்டார்ட் அப்களின் என்ட்ரி

குறிப்பாக சமீபத்திய ஆண்டுகளாக பல்வேறு புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சோமேட்டோ, நய்கா, பாலிசி பஜார் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் பங்கு சந்தையில் நுழைந்துள்ளன. மிகப்பெரிய முதலீட்டினை திரட்டியுள்ளன. ஆனால் இந்த காலகட்டத்தில் முதலீட்டாளர்களின் முதலீடு என்பது மிகப்பெரிய இழப்பினை கண்டுள்ளது.

புதிய வெளியீடு மற்றும் OFS-க்கான திருத்தம்

புதிய வெளியீடு மற்றும் OFS-க்கான திருத்தம்

ஒரு நிறுவனம் பற்பல காரணங்களுக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீட்டினை திரட்டி கொள்ளலாம். புதிய வெளியீடு மூலம் முலதன செலவினங்கள், கார்ப்பரேட் நடவடிக்கைகள், கடனை திரும்ப செலுத்துதல் உள்ளிட்ட பல காரணங்களுக்காக திரட்டலாம்.

OFS இலக்கு?

OFS இலக்கு?

இதே OFS மூலம் தற்போதைய பங்குதாரர்களுக்கு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ வெளியேறும். ஆர்கானிக் வளர்ச்சி இலக்கினை நிறுவனம் அடையாளம் காணப்படவில்லை என்றால், ஒரு நிறுவனம் புதிய வெளியீட்டில் ஆர்கானிக் வளர்ச்சி நிதிக்காக வெளியீட்டில் அளவில் 25% மட்டுமே திரட்ட முடியும்.

பொது நிறுவன நோக்களுக்கான திட்டம்

பொது நிறுவன நோக்களுக்கான திட்டம்

அதேபோல வெளியீட்டின் அளவில் 35% மட்டுமே பொது நிறுவன நோக்களுக்கான திரட்ட முடியும். இந்த திருத்தங்களுக்கு முன்பு நிறுவனம் நிறுவனம் எவ்வாறு ஆர்கானிக் மற்றும் மற்றும் பொது நிறுவன கார்ப்பரேட் நோக்களுக்காக நிதி திரட்டபட்டது என்பதை கூற வேண்டியதில்லை.

OFS விஷயத்தில் திருத்தம்

OFS விஷயத்தில் திருத்தம்

OFS விஷயத்தில் திருத்தங்களுக்கு முன், ஏற்கனவே உள்ள பங்குதாரர்களின் பங்குகளை விற்பனை செய்வதில் எந்த தடையும் இல்லை. ஆனால் இந்த திருத்தங்களுக்கு பிறகு 20% அதிகமான பங்குகளை வைத்திருக்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர், தனது பங்குகளில் 50% வரை மட்டுமே OFS மூலம் விற்க முடியும். 20% குறைவாக இருந்தால், பங்குதாரர் 10% வரை மட்டுமே விற்பனை செய்ய முடியும்.

ஆங்கர் முதலீட்டாளர்கள்

ஆங்கர் முதலீட்டாளர்கள்

இதே ஆங்கர் முதலீட்டாளர்களை பொறுத்தவரையில் ஏப்ரல் 2022 முதல், ஆங்கர் முதலீட்டாளர்கள் 50% பங்குகளுக்கு 30 நாட்கள் லாக் இன் காலத்தை கொண்டிருந்தனர். மீதமுள்ள 50% பங்குகளுக்கு லாக் இன் காலம் 90 நாட்களாக உள்ளது.

NII விதிகள்

NII விதிகள்

900X வரையிலான NII வகை அதிகப்படியான சந்தாக்கள் 2 - 10 லட்சம் ரூபாய் முதலீட்டாளர்கள் எந்த ஒதுக்கீட்டையும் பெறுவது கிட்டதட்ட சாத்தியமற்றது. இந்த நடவடிக்கையானது HNI-கள் அதிகளவிலாக் கடன் வாங்கும் திறன் மற்றும் ஏலம் எடுக்கும் திறனை குறைக்கும்.

விற்பனைக்கான சலுகை மீதான கட்டுப்பாடு

விற்பனைக்கான சலுகை மீதான கட்டுப்பாடு

புதிய செபியின் படி, ஆஃபர் ஃபார் சேல் மூலமாக விற்பனை செய்யப்படவுள்ள பங்கினில், 20% அதிகமான பங்குகளை வைத்திருக்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர், தனது பங்குகளில் 50% வரை மட்டுமே OFS மூலம் விற்க முடியும். 20% குறைவாக இருந்தால், பங்குதாரர் 10% -க்கும் அதிகமாகவும் விற்க முடியாது.

கவனிக்க வேண்டிய செய்திகள்

கவனிக்க வேண்டிய செய்திகள்

வணிகக் காரணங்களுக்காக பல ஐபிஓ பிணைய நிறுவனங்களுக்கு நிதி தேவைப்படாமல் இருந்தது. ஆனால் இது விளம்பரதாரர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள பங்குதாரர்களுக்கு வெளியேறும் வாய்ப்பாக இருந்தது. குறிப்பாக தனியார் பங்குகள் மற்றும் வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளில் வழங்கப்படுகின்றன. ஆரம்பகால முதலீட்டாளார்கள் ஐபிஓ-வினால் ஆதாயமடைந்தனர்.

குறைந்தபட்ச விலை (விலை வரம்பு)

குறைந்தபட்ச விலை (விலை வரம்பு)

முன்னோக்கிச் செல்லும்போது குறைந்த விலைக் குழுவில் குறைந்த விலைக் குழுவானது குறைந்தபட்சம் 105% ஆக இருக்க வேண்டும். அதாவது குறைந்த விலைக் குழு 1000 ரூபாய் என்றால், குறைந்தபட்சம் 2050 ரூபாயாக இருக்க வேண்டும். சரியான விலையை உறுதி செய்வதே செபியின் நோக்கம். சமீபத்திய காலாண்டுகளாகவே பல நிறுவனங்களும் தங்களது பங்குகளை சலுகை விலையில் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: sebi ipo செபி ஐபிஓ
English summary

5 key new IPO rules that you must know about

The number of companies entering the Indian stock market has increased significantly over the past few years. Meanwhile, it has amended some of the rules regarding issue of shares.
Story first published: Monday, November 21, 2022, 21:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X