கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வாடகை சட்டங்களில் திருத்தம் கொண்டு வர மாதிரி வாடகை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இது மக்கள் மத்தியில் அதிகளவிலான கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் குழப்பங்களைத் தீர்க்கும் வகையில், இப்புதிய சட்டத்தில் இருக்கும் முக்கிய அம்சங்களை இப்போது பார்ப்போம்.
2 மாத வாடகை மட்டுமே அட்வான்ஸ்
இப்புதிய சட்டத்தின் மூலம் வாடகைதாரர்களிடம் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை வாங்க முடியாது. இதைக் கட்டாயம் ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது.
இணையதளத்தில் பதிவேற்றம்
வாடகைதாரர் மற்றும் வீடு உரிமையாளர்கள் நம்பிக்கை மற்றும் நிதி பரிமாற்றத்தைக் கண்காணிக்கும் வகையில் வாடகை ஒப்பந்த நகலை, மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
நீதிமன்றம் செல்ல முடியும்
முன்பெல்லாம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் வாடகை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தைப் பதிவு செய்யாவிட்டாலும் இரு தரப்பும் நீதிமன்றம் செல்ல முடியும். இது வாடகைதாரர் மற்றும் வீடு உரிமையாளர்கள் ஆகிய இரு தரப்புக்கும் நன்மை அளிக்கும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
பதிவு அலுவலகத்தில் வாடகை ஒப்பந்தம் பதிவு செய்யப்படாவிட்டாலும், புதிய சட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பகுதிவாரியாக அமைக்கப்பட்டுள்ள வாடகை ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் அல்லது நேரடியாக வாடகை ஒப்பந்தத்தைப் பதிவு செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தத்தைப் பதிவு செய்யாவிட்டால், நிவாரணம் கோரி இரு தரப்பும் நீதிமன்றம் செல்ல முடியாது.
வீட்டு உரிமையாளருக்கு அதிகாரம்
மேலும் வாடகைதாரர் மற்றும் வீடு உரிமையாளர்கள் மத்தியில் ஒப்பந்தம் போடாத நிலையில், வீட்டு உரிமையாளர் மட்டும் நீதிமன்றத்தை நாட புதிய சட்டத்தில் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. வீட்டை காலி செய்யாவிட்டால் சட்டப்படி வாடகையை அதிகரிக்க உரிமை உண்டு.
தனி வாடகை ஆணையம்
வாடகை தொடர்பான புகார்களை விசாரிக்கத் தனி வாடகை ஆணையம் அல்லது வாடகை தீர்ப்பாயம் அமைக்கப் புதிய சட்டத்தில் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications