கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வாடகை சட்டங்களில் திருத்தம் கொண்டு வர மாதிரி வாடகை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இது மக்கள் மத்தியில் அதிகளவிலான கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் குழப்பங்களைத் தீர்க்கும் வகையில், இப்புதிய சட்டத்தில் இருக்கும் முக்கிய அம்சங்களை இப்போது பார்ப்போம்.
2 மாத வாடகை மட்டுமே அட்வான்ஸ்
இப்புதிய சட்டத்தின் மூலம் வாடகைதாரர்களிடம் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை வாங்க முடியாது. இதைக் கட்டாயம் ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது.
இணையதளத்தில் பதிவேற்றம்
வாடகைதாரர் மற்றும் வீடு உரிமையாளர்கள் நம்பிக்கை மற்றும் நிதி பரிமாற்றத்தைக் கண்காணிக்கும் வகையில் வாடகை ஒப்பந்த நகலை, மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
நீதிமன்றம் செல்ல முடியும்
முன்பெல்லாம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் வாடகை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தைப் பதிவு செய்யாவிட்டாலும் இரு தரப்பும் நீதிமன்றம் செல்ல முடியும். இது வாடகைதாரர் மற்றும் வீடு உரிமையாளர்கள் ஆகிய இரு தரப்புக்கும் நன்மை அளிக்கும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
பதிவு அலுவலகத்தில் வாடகை ஒப்பந்தம் பதிவு செய்யப்படாவிட்டாலும், புதிய சட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பகுதிவாரியாக அமைக்கப்பட்டுள்ள வாடகை ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் அல்லது நேரடியாக வாடகை ஒப்பந்தத்தைப் பதிவு செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தத்தைப் பதிவு செய்யாவிட்டால், நிவாரணம் கோரி இரு தரப்பும் நீதிமன்றம் செல்ல முடியாது.
வீட்டு உரிமையாளருக்கு அதிகாரம்
மேலும் வாடகைதாரர் மற்றும் வீடு உரிமையாளர்கள் மத்தியில் ஒப்பந்தம் போடாத நிலையில், வீட்டு உரிமையாளர் மட்டும் நீதிமன்றத்தை நாட புதிய சட்டத்தில் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. வீட்டை காலி செய்யாவிட்டால் சட்டப்படி வாடகையை அதிகரிக்க உரிமை உண்டு.
தனி வாடகை ஆணையம்
வாடகை தொடர்பான புகார்களை விசாரிக்கத் தனி வாடகை ஆணையம் அல்லது வாடகை தீர்ப்பாயம் அமைக்கப் புதிய சட்டத்தில் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications