2020-21ஆம் நிதியாண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வருமான வரி, வரிச் சேமிப்பு, முதலீடு ஆகியவற்றைத் தொடர்பாகப் பல முக்கியப் பணிகளை மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
ஏற்கனவே பலர் வருமான வரியைச் சேமிக்க முக்கியமான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யத் தயாராகி இருப்பீர்கள். இதேவேளையில் பலர் அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தைச் செலுத்தாமல் இருப்பீர்கள் அதை உடனே செலுத்தி விடுங்கள்.
வருமான வரி தாக்குதல்
2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கை, திருத்தப்பட்ட வருமான வரி அறிக்கையைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள் மார்ச் 31. இதை இதுநாள் வரையில் செய்யத் தவறியவர்கள் கட்டாயம் உடனடியாகச் செய்தாக வேண்டும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலம் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் அபராதத்துடன் மார்ச் 31 வரையில் செலுத்த முடியும்.
முன்கூட்டிய வரி
வருடத்திற்கு 10000 ரூபாய்க்கு அதிகமான வருமான வரி செலுத்த வேண்டியவர்கள் அட்வான்ஸ் டாக்ஸ் எனப்படும் முன்கூட்டிய வரியை 4 பகுதிகளாகச் செலுத்த வேண்டும். இந்நிலையில் மார்ச் 15ஆம் தேதிக்குள் 2020-21 நிதியாண்டுக்கான 4வது பகுதியைச் செலுத்த வேண்டும்.
வருமான வரிச் சேமிப்பு
80சி பிரிவில் வருடத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரிச் சலுகை பெற முடியும். எனவை மார்ச் 31ஆம் தேதிக்குள் இப்பிரிவு சலுகையை முழுமையாகப் பெற வேண்டுமாயின் வரியைச் சேமிக்க மார்ச் 31ஆம் தேதிக்குள் முதலீடு செய்துகொள்ளுங்கள் இல்லையெனில் வருமான வரியாகப் பெரும் பகுதி தொகையை அரசு செலுத்த வேண்டி வரும்.
ஆதார் மற்றும் பான் இணைப்பு
மத்திய அரசு ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்கப் பல முறை கால நீட்டிப்பு செய்துள்ள நிலையில், ஆதார் மற்றும் பான் எண்-ஐ இணைக்க மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த முறை இணைக்காவிடில் பான் எண் பயன்படுத்த முடியாமல் போகும் நிலை உருவாகும் எனத் தெரிகிறது.
இதேபோல் Vivad Se Vishwas அறிக்கையைத் தாக்கல் செய்ய மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications