6 நாளில் ரூ.9,000 கோடி காற்றில் பறந்தது.. 20 லட்சம் கோடி திட்டத்தின் எபெக்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா பிடியில் இருந்து இந்தியா மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வகும் நிலையில், நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சந்தையை ஊக்குவிக்கவிக்கவும், பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு வரவும் மோடி தலைமையிலான அரசு சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்தது.

இத்திட்டம் குறித்து மக்கள் மத்தியில் மாறுபட்ட கருத்து இருந்து வரும் நிலையில், இந்தத் திட்டம் மூலம் இந்தியப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை இல்லாமல் மே12 நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் அறிவிப்புக்குப் பின் அன்னிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டை வெளியேற்றியுள்ளனர்.

இது பங்குச்சந்தையில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.5,200 கோடி நஷ்டத்தில் ஏர்டெல்.. முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை..!ரூ.5,200 கோடி நஷ்டத்தில் ஏர்டெல்.. முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை..!

மே 12

மே 12

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மே12 நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் முயற்சியாகப் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களைப் பல கட்டங்களாக அறிவித்தார். இந்த அறிவிப்புகள் ஓன்றிணைத்து பார்த்தால் கிட்டதட்ட ஒரு இடைக்காலப் பட்ஜெட் அறிக்கை என்று கூறினால் மறுக்க முடியாது.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

நிர்மலா சீதாராமன் தலைமையிலான மத்திய நிதியமைச்சகம் பல ஆய்வுகளைச் செய்து அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் அன்னிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவில் நம்பிக்கை கொடுக்காத காரணத்தால் மே 12க்குப் பின் சுமார் 9000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து இந்திய சந்தையில் வெளியேற்றியுள்ளனர்.

நோமுரா

நோமுரா

மே 12 ஆம் தேதி துவங்கி 5 நாட்கள் படிப்படியாகப் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது, இந்த 5 நாட்களில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் நம்பிக்கையும் (silver bullets) காணப்படவில்லை எனக் குளோபல் முதலீட்டு வங்கியான நோமுரா மே 17ஆம் தேதி அறிவித்துள்ளது.

ஜிடிபி சரிவு

ஜிடிபி சரிவு

மத்திய அரசு தற்போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறுகிய கால வளர்ச்சி திட்டங்களாக இல்லை. இதனால் 2020 மார்ச் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் மேசமான நிலையைச் சந்திக்கும். இந்தியாவின் ஜிடிபி 5 சதவீதம் வரையில் குறையும் என்று அமெரிக்க முதலீட்டுச் சந்தை நிறுவனமான கோல்டுமேன் சாச்சீஸ் நிறுவனமும் தெரிவித்துள்ளது.

9600 கோடி ரூபாய்

9600 கோடி ரூபாய்

மே 7ஆம் தேதி ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனங்கள் மீது அதிகளவில் வர்த்தகம் நடந்தாலும் கடந்த 10 நாட்களில் இந்திய சந்தையில் இருந்து அன்னிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் சுமார் 9600 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை வெளியேற்றியுள்ளனர். இதில் 90 சதவீதம் மே 12 அறிவிப்புக்குப் பின்பு நடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

₹9,600 crore FPI sell-off in May: unattractive ₹20 lakh crore package

Despite Indian government’s efforts to restart the Indian economy, foreign portfolio investors (FPIs) have exited the Indian markets in droves. Over 90% of the total ₹9,600 crore FPI sell-off in May has happened since Narendra Modi’s announcement of ₹20 lakh crore package on May 12. Global investment banks Nomura and Goldman Sachs have predicted that the Indian GDP will fall by 5% in 2020.
Story first published: Tuesday, May 19, 2020, 7:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X