வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் கிரிப்டோ முதலீட்டாளர்கள் பல முன்னணி பிரபலங்களின் ஆதரவு மற்றும் முதலீடுகளைத் தொடர்ந்து அதிகளவிலான முதலீட்டை பிட்காயின் மீது செய்தனர். இதன் எதிரொலியாக வெள்ளிக்கிழமை அமெரிக்க வர்த்தகச் சந்தையின் துவக்கிய பின்பு, ஆரம்பம் முதல் தொடர் வளர்ச்சியில் இருந்த பிட்காயின், எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் மட்டும் சுமார் 3500 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

இந்த அதிரடி வளர்ச்சியின் மூலம் ஒரு பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத உச்ச அளவான 56,563 டாலர் அளவீட்டை அடைந்துள்ளது. இதன் மூலம் மொத்த பிட்காயின் சந்தை மதிப்பு 1.06 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.
உலகளவில் கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் மட்டுமே இதுவரை 1 டிரில்லியன் டாலர் என்ற அளவீட்டை அடைந்துள்ள நிலையில் முதல் முறையாகப் பிட்காயின் 1 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை அடைந்து முதலீட்டாளர்களை மகிழ்வித்துள்ளது.
சமீபத்தில் டெஸ்லா உட்படப் பல முன்னணி நிறுவனங்கள் பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சிக்கு ஆதரவாகவும் அதிகளவில் முதலீடு செய்யும் நிலையில் கிரிப்டோ சந்தையில் தொடர்ந்து முதலீடுகள் அதிகரித்து வருகிறது.
வெள்ளிக்கிழமை ஏற்பட்ட அதிரடி வளர்ச்சியின் மூலம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பிட்காயின் சுமார் 18 சதவீதமும், இந்த வருடத்தில் அதிகப்படியாக 92 சதவீத வளர்ச்சியும் அடைந்துள்ளது.
மேலும் சந்தையில் இருக்கும் அனைத்து டிஜிட்டல் கரன்சியின் மொத்த சந்தை மதிப்பு 1.7 டிரில்லியன் டாலர், இதில் பிட்காயின் மதிப்பு மட்டும் 1.06 டிரில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications