தனியாரை சேர்ந்த ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்கின் பங்கு விலை இன்று 10% வரை அதிகரித்துள்ளது.
எதற்காக இந்த திடீர் ஏற்றம்? என்ன காரணம்? தற்போது விலை நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்கின் நிர்வாக குழு 3,000 கோடி ரூபாய் நிதி திரட்ட ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த பங்கின் விலையானது கிடு கிடு ஏற்றத்தினை கண்டுள்ளது.

இதற்கிடையில் பிஎஸ்இ-யிலும் இந்த பங்கின் விலையானது 7.49 சதவீதம் அதிகரித்து 62.45 ரூபாயாக ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது. எனினும் இந்த தனியார் வங்கி பங்கின் விலையானது இன்று அதிகபட்சமாக பிஎஸ்இ -யில் 65.70 ரூபாயாகவும், இதே குறைந்தபட்சமாக 57.55 ரூபாயாகவும் வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.
இதே என்எஸ்இ-யிலும் இந்த பங்கின் விலையானது 7.40 சதவீதம் அதிகரித்து 62.40 ரூபாயாக ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது. எனினும் இந்த தனியார் வங்கி பங்கின் விலையானது இன்று அதிகபட்சமாக என்எஸ்இ-யில் 66.80 ரூபாயாகவும், இதே குறைந்தபட்சமாக 57.60 ரூபாயாகவும் வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.
இந்த தனியார் வங்கியாளர் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்கான வலுவான கண்ணோட்டத்தினை கொண்டுள்ளதாகவும், இதனால் இந்தியாவில் பல வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறியுள்ளது.
அதோடு இந்த தனியார் வங்கி நிதி திரட்ட திட்டமிட்டுள்ள நிலையில், அதனை பத்திரங்கள் மூலம் திரட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த நிதி திரட்டலை ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட முறைகளில் திரட்டலாம் என்றும் இவ்வங்கி எதிர்பார்க்கிறது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த வங்கி பங்கின் முகமதிப்பு 10 ரூபாயாகும். பங்கின் விலை குறைவாக இருந்தாலும், இதன் முக மதிப்பு அதிகம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications