பொதுவாக பங்கு சந்தைகள் அதிக ஏற்றம் இறக்கம் இருக்கும்போது முதலீடுகள் அதிகரிக்கும். ஆனால் இப்படியான பங்குகள் சில சமயங்களில் எஃப் & ஓவில் தடை செய்யப்படும்.
ஏன் இந்த தடை? எதற்காக இந்த பங்குகள் தடை செய்ய செய்யப்படுகின்றது. இதனை எப்படி தெரிந்து கொள்வது?
தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் எஸ்கார்ட்ஸ் நிறுவன பங்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. ஏன் இந்த பங்குகள் தடை செய்யப்பட்டுள்ளது வாருங்கள் பார்க்கலாம்.
தடை ஏன்?
பொதுவாக பங்கு சந்தையில் குறிப்பாக F&O சந்தையில் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம் என்ற நிலை கிடையாது. அதற்கென வரம்பு உண்டு. ஆக அந்த வரம்பினை தாண்டி வர்த்தகமானால் அந்த பங்குகள் எஃப் & ஓவில் தடை செய்யப்படுகின்றது.
MWPL (Market Wide Position Limited)
எஃப் & ஓவில் வர்த்தகர்கள் லிமிட்டிற்குள்ளாகத் தான் ஆர்டர்களை செய்ய முடியும். அதற்கு MWPL லிமிட் இருக்கும். ஆக இந்த லிமிட்டினை தாண்டினால் எஃப் & ஓவில் அந்த நிறுவனம் தடை செய்யப்படும். அதனையும் மீறி இந்த தடை செய்யப்பட்ட நிறுவனங்களில் ஆர்டர்களை போட்டால், உங்களுக்கு ஒரு எச்சரிக்கை மெசேஜ் வரும்.
ஒபன் இன்ட்ரஸ்ட் வரம்பு
இதனை டெக்னிக்கலாக ஒபன் இன்ட்ரஸ்ட் என்பார்கள். இந்த ஒபன் இன்ட்ரஸ்ட் விகிதமானது 95% வரம்பினை தாண்டினால் தான் எஃப் & ஓவில் பங்குகள் தடை செய்யப்படும். இந்த பங்குகளின் ஒபன் இன்ட்ரஸ்ட் விகிதமானது மீண்டும் 80% கீழாக குறையும்போது தான், இதில் மீண்டும் வர்த்தகம் தொடங்கும்.
புதிய ஆர்டர்கள் போட முடியாது?
தற்போது இந்த தடை பட்டியலில் தான் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் எஸ்கார்ட்ஸ் நிறுவனங்களின் பங்குகள் உள்ளது. இந்த நிறுவனங்களின் Market Wide Position Limited ஆனது 95% தாண்டியுள்ளது. இந்த நிறுவனங்களில் புதியதாக ஆர்டர்களை போட முடியாது. எனினும் ஏற்கனவே இருக்கும் ஆர்டர்களை முடித்துக் கொள்ளலாம்.
மீண்டும் வர்த்தகம்
அதுல் லிமிடெட், பிர்லாசாப்ட், குஜராத் பெட்ரோநெட் லிமிடெட், லாரஸ் லேப்ஸ், எஸ்பிஐ கார்டுகள், வேர்ல்பூல் ஆஃப் இந்தியா லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த அக்டோபர் இறுதியில் எஃப் & ஓவில் தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வர்த்தகத்திற்கு திரும்பியுள்ளன.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications