கொரோனா வைரஸ். ஒரே ஒரு வைரஸால் உலகம் ஸ்தம்பித்துவிட்டது. அதில் இருந்து மருத்துவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மீள ஒவ்வொரு நாடும், தங்கள் கஜானாக்களில் இருந்து பணத்தை வாரி இரைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
சமீபத்தில் தான் கொரோனாவால் மக்கள் சிரமப்படாமல் இருக்க, இந்திய அரசு, 1.70 லட்சம் கோடி ரூபாய்க்கு அரிசி பருப்பு தொடங்கி மாதாந்திர உதவித் தொகை வரை பலவற்றையும் அறிவித்தது.
ஆனால் இப்போது இந்தியப் பொருளாதாரத்தை மீட்கும் விதத்தில் சிறு குறு வியாபாரிகளுக்கு மட்டும் தனியாக ஒரு உதவித் திட்டத்தை அறிவிக்கலாம் என இந்தியா டுடே தன் வலைதளத்தில் சொல்லி இருக்கிறது.
1 லட்சம் கோடி
இந்த விஷயத்தை இரண்டு அரசு தரப்பு அதிகாரிகள் இன்று உறுதி செய்து இருப்பதாகவும் இந்தியா டுடே வலைதளச் செய்திகள் சொல்கின்றன. சிறு வியாபாரிகளை கருத்தில் கொண்டு இந்த இரண்டாவது உதவித் திட்டம் இருக்குமாம் இந்த திட்டம் சுமார் 1 லட்சம் கோடி மதிப்புடையதாக இருக்குமாம். ஏன் சிறு குறு வியாபாரிகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம்?
பொருளாதாரத்தில் சிறு வியாபாரிகள்
இந்திய பொருளாதாரத்தின் மொத்த மதிப்பான 2.9 ட்ரில்லியன் டாலரில் சுமார் 25 சதவிகிதம் சிறு குறு வியாபாரிகள் மற்றும் தொழில்முனைவோர்களால் வருகிறதாம். அதோடு இந்தியாவில் சுமாராக 50 கோடி பேர் இந்த எம் எஸ் எம் இ நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளின் கீழ் தான் வேலை செய்து கொண்டு இருக்கிறார்களாம். எனவே தான் இவர்களுக்கு சிறப்பு கவனமாம்.
பெரு நிறுவனங்களுக்கு
இந்த சிறு குறு தொழில் முனைவோர்கள் மற்றும் வியாபாரிகளுக்கான திட்டத்துக்குப் பிறகு, கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு தனியாக ஒரு உதவித் திட்டத்தை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள். பெரு நிறுவனங்கள் கொரோனா வைரஸ் லாக் டவுனால் எவ்வளவு அடி வாங்கி இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்துவிட்டு தான் இந்த திட்டம் தயாராகுமாம்.
என்ன சிறப்பு அம்சம்
இந்த சிறு குறு வியாபாரிகளுக்காக அறிவிக்க இருக்கும் திட்டங்களில், வங்கிக் கடன் வரம்புகளை அதிகரிப்பது, எம் எஸ் எம் இ தரப்பினர் சில வரிச் சலுகைகளைப் பெற சில வரம்புகளை உயர்த்துவது, வருமான வரி போன்ற வரிகளைச் செலுத்துவதற்கான காலக் கெடுக்களை நீட்டிப்பது போன்றவைகளும் இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications