சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கி கடன் களை வழங்குவதற்கு நடைமுறைகளை எளிதாக்குவதற்கும், எளிமைப்படுத்துவதற்கும் தமிழக அரசு விரைவில் ஒரு போர்டலை உருவாக்க உள்ளதாக தமிழகத்தின் நிர்வாக அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
மூத்த வங்கி அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்களுடன் ஒரு கூட்டத்தில் பேசிய அமைச்சர் வேலுமணி, இந்த போர்டலானது வங்கிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதிலும் தற்போது நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலதிபர்கள் வங்கிகளை அணுகி கடன் கேட்க தேவையில்லை. ஏனெனில் அவர்கள் தேவையான ஆவணங்களை உருவாக்கப்படும் இந்த போர்டல் மூலம் பதிவு செய்தால் போதும் என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டும் அல்ல, இக்கூட்டத்தில் கூறப்பட்ட, தொழிலாளர்களின் பரிந்துரைகள், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அதோடு கடன் களை விரைவாக பெறுவதில் உள்ள சிக்கல்களை வங்கிகள் தீர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1.5 லட்சம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 15 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் 8,284 சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 554 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆக கொரோனா பரவலுக்கு மத்தியில், நாட்டின் ஜிடிபியில் முக்கிய பங்கு வகிக்கும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பல சலுகைகளை அரசு தொடர்ந்து பரிந்துரைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதிலும் கொரோனாவினால் பெரும் நெருக்கடியினை சந்தித்துள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக, மத்திய அரசு பிணை இல்லாமல் 3 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அவசரகால கடன் உதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த கடனுக்கு வட்டி விகிதம் 9.25 சதவீதம் என்றும் மத்திய அரசு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த ஜூன் 12 வரையில், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 32,049.86 கோடி ரூபாய் கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதே 16,031.39 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications