டெல்லி: இந்த 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே மத்திய ரிசர்வ் வங்கி தன்னால் முடிந்த வரை, ரெப்போ ரேட் வட்டி விகிதங்களைக் குறைத்துக் கொண்டே வந்திருக்கிறது. ஆனால் வங்கிகளால், மத்திய ரிசர்வ் வங்கி அளவுக்கு, கடனுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்க முடியவில்லை. இருப்பினும் வங்கிகளை அழைத்துப் பேசி, ரெப்போ ரேட் அடிப்படையிலான வட்டி விகிதங்களைக் கொண்ட கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
மத்திய ரிசர்வ் வங்கி நீங்களாக, நிதி அமைச்சகம் தொடர்ந்து கடன் கொடுக்கச் சொல்லி பொதுத் துறை வங்கிகளை வலியுறுத்திக் கொண்டே இருந்தது. இந்த தொடர் வலியுறுத்தல் மற்றும் பொதுத் துறை வங்கிகளின் உழைப்பு எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஒரு நல்ல பலனைக் கொடுத்து இருக்கிறது.

கடந்த அக்டோபர் 2019 ஒரே மாதத்தில் மட்டும் பொதுத் துறை வங்கிகள் 2.52 லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுத்து இருக்கிறார்களாம். பொதுவாக இந்தியாவில் அக்டோபர் மாதம் ஒரு பண்டிகை காலம் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.
பொதுவாகவே பண்டிகை காலங்களில், இந்தியாவில் வீடு போன்ற பெரிய பெரிய சொத்துக்களை வாங்குவது தொடங்கி, ஒரு சின்ன தங்க நகை வாங்குவது வரை பண்டிகையில் வாங்குவது ஒரு வழக்கம் தானே. எனவே கடனும் கொஞ்சம் அதிகமாகவே கொடுக்கப்பட்டு இருப்பதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.
கடந்த அக்டோபர் 2019-ல் 2,52,589 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் 1,05,599 கோடி ரூபாய் கடன் டேர்ம் கடன்களாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. 46,800 கோடி ரூபாய் வொர்க்கிங் கேப்பிட்டல் கடன்களாக கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான கடன், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு கொடுத்திருக்கும் கடன் தான். என் பி எஃப் சி நிறுவனங்களூக்கும் கடந்த அக்டோபர் 2019 ஒரே மாதத்தில் சுமாராக 19,625 கோடி ரூபாய் கடன் கொடுத்து இருக்கிறார்களாம்.
இது இந்தியப் பொருளாதாரத்தில் இது ஒரு பெரிய திருப்பம். வங்கிகளிடம் கடன் கொடுக்க போதுமான நிதி இருக்கிறது. இனி வரும் காலங்களில் வங்கிகளால் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் கொடுக்க முடியும் எனச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சக செயலர் ராஜிவ் குமார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications