3ல் 2 இந்தியர்கள் பட்ஜெட் 2022 ஆனது பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என நம்புகின்றனராம்.
இது குறித்தான லோக்கல் சர்க்கிள்ஸ் ஆய்வில், இந்தியர்கள் பலரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் நம்பிக்கை கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும் தற்போது கொரோனா தொற்று நோயின் காரணமாக தொடர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், மக்கள் வருமான வரி சலுகையில் பல மாற்றங்களை செய்யலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் எதிர்பார்க்கப்பட்டதை போல அப்படி ஏதும் அறிவிப்புகள் வெளியாகவில்லை.
அசைக்க முடியாத நம்பிக்கை
குறிப்பாக தனி நபர் வருமான வரி திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன் மூலம் மக்களுக்கு நேரடியாக எந்த பெரிய நிவாரணமும் அளிக்கப்படவில்லை. இதற்கிடையில் இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் 24% மக்கள் பட்ஜெட் அறிவிப்பினால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
எதுவும் நடக்காது
இதே பதிலளித்தவர்களில் 42% பேர் ஒரு துறையாவது பட்ஜெட்டால் பலனடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேசமயம் 29% மக்கள் எந்த தாக்கத்தினையும் ஏற்படுத்தாது என கூறியுள்ளனர்.
இந்த சர்வேயானது இந்தியாவின் 342 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 40,000 பேர் பதிலளித்துள்ளனர்.
எதிர்பார்த்தது இல்லை
இந்த ஆய்வில் 56 சதவீதம் பேர் பட்ஜெட்டில் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர். இதே 42% பேர் எதிர்பார்த்ததை விட அதிகமாக பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளதாகவும் பதிலளித்துள்ளனர். மொத்தத்தில் சாமானியர்களின் எதிர்பார்ப்புகள் இந்த பட்ஜெட் அறிவிப்புகளில் வராவிட்டாலும், கார்ப்பரேட் கூடுதல் கட்டணங்களில் விலக்கு, உள்கட்டமைப்பு துறைக்கு அதிக ஒதுக்கீடு, என பலவும் பெரும் கார்ப்பரேட்களுக்கு உதவிகரமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
சாமானியர்களுக்கு ஒன்றும் இல்லை
ஒரு புறம் இதன் முலம் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என அரசு நம்பினாலும், மறுபுறம் நேரிடையாக சாமானிய மக்களுக்கு எந்த அறிவிப்பும் பெரிதாக வெளியாகவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையே. எனினும் நீண்டகால நோக்கில் உள்கட்டமைப்பு துறை வசதி, வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவிகரமாக இருக்கும் என்பதும் மறுக்க முடியாததே. இதனைத் தான் இந்த ஆய்வும் சுட்டிக் காட்டுகின்றது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications