
அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் நிதி விவரங்கள் குறித்து உள் தகவல்களை (Insider trading) அறிந்து 75 பில்லியன் டாலர்கள் மோசடி செய்ததாக ராஜ் ராஜரத்தினம் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு 11 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
(ஒரு நிறுவனத்தின் நிதி நிலைமையை முறைகேடான வழிகளில் முழுமையாக அறிந்து வைத்து அதன் பங்குகளை வாங்குவதும், விற்பதும் தான் இன்சைடர் டிரேடிங்)
இந்த மோசடியில் ராஜரத்தினத்துக்கு உதவிதாக ரஜத் குப்தா மீதும் அமெரிக்க புலனாய்வு அமைப்பினர் வழக்குப் பதிவு செய்தனர்.
ரஜத் குப்தா தான் பணியாற்றிய கோல்ட்மென் சேக்ஸ், புராக்டர் அண்ட் கேம்பிள், பெர்க்சைர் இன்வெஸ்ட்மென்ட், மெக்கிங்ஸ்லி நிதி நிறுவனம் ஆகியவற்றின் நிதி விவரங்களை கலியோன் ஹெட்ஜ்ஃபண்ட் நிறுவனரான ராஜரத்தினத்துக்கு அளித்துள்ளார்.
(பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்படும்போது அதனால் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்க பல வகையான நிதி ஆலோசனைகளை வழங்கும் நிறுவனங்கள் தான் ஹெட்ஜ் பண்ட்)
இதை அடிப்படையாக வைத்து ராஜரத்னம் இந்த நிறுவனத்தின் நிதி நிலைமை சரியாக இருக்கும்போது பங்குகளை வாங்கிக் குவித்தார். இவற்றின் நிலை நிலைமை சரிந்தபோது பங்குகளை விற்றுவிட்டார். இதன்மூலம் ராஜரத்னம் பல பில்லியன் லாபம் அடைந்தார். ஆனால், பங்குச் சந்தையில் மற்ற முதலீட்டாளர்களுக்கு ஏராளமான நஷ்டத்தை ஏற்படுத்தினார்.
இதற்காக ரஜத் குப்தா உள்ளிட்டோருக்கு ராஜரத்தினம் ஏராளமான பணத்தை லஞ்சமாகக் கொடுத்துள்ளார்.
ரஜத் குப்தா மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியானவுடன் அவர் தலைமறைவானார். பின்னர் அவர் காவல் துறையினரிடம் சரணடைந்து, விசாரணை ஆரம்பமானது. இதில் அவர் மீதான 6 குற்றச்சாட்டுகளில் 4 குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மன்ஹாட்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றங்களுக்கான தண்டனை விவரம் அக்டோபர் மாதம் 18ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தக் குற்றங்களுக்கு அதிபட்சமாக 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications