இந்தியப் பொருளாதார நிலைமையே படுமோசமாகி இருக்கக் கூடிய நிலையில் ஐரோப்பிய பொருளாதார சிக்கலை சமாளிக்க இந்திய நிதி உதவி அளிப்பதா? என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தையும் பிரதமர் மன்மோகன்சிங் நிராகரித்துள்ளார்.
"சர்வதேச பொருளாதார நிதியத்துக்கான இந்தியாவின் பங்களிப்பு என்பதில் எந்தத் தவறுமே இல்லை. இன்னும் கூடுதலாக சொல்லப் போனால் இந்தியாவின் கையிருப்பாகவும் அது இருந்து வரும்" என்றார் அவர்.
இந்த நிதி உதவியை அறிவிப்பதற்கு முன்பாக ஜி-20 மாநாட்டின் போது பிரிக்ஸ் நாடுகளான ரஷியா, பிரேசில், சீனா மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளின் தலைவர்களுடனும் கலந்து ஆலோசிக்கப்பட்டது என்றார் அவர்.
மேலும் பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் இணைந்து மொத்தம் 75 மில்லியன் அமெரிக்க டாலரை சர்வதேச பொருளாதார நிதியத்துக்கு பங்களிப்பு செய்யவும் முடிவு செய்திருப்பதாகவும் கூறினார் மன்மோகன்சிங், ஐரோப்பிய பொருளாதார சிக்கலை சமாளிக்க மொத்தம் 430 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற தேவை நிலையில் பிரிக்ஸ் நாடுகளின் பங்களிப்பு கணிசமான ஒன்றாக இருக்கும் என்றார் மன்மோகன்சிங்