இந்திய அரசு நிறுவனங்களில் முதலீடு செய்ய வெளிநாட்டு மத்திய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி!

By Chakra
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாங்கோ...வாங்கோ.. வெளிநாட்டு முதலீடுகளுக்கு 'கதவு- ஜன்னலை' திறந்துவிட்ட ரிசர்வ் வங்கி!
டெல்லி: வெளிநாடுகளில் இருந்து இந்திய நிறுவனங்கள் ரூ. 2 லட்சம் கோடி (40 பில்லியன் டாலர்) வரை கடன் வாங்கிக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன் இந்த அளவு ரூ. 1.5 லட்சம் கோடியாக (30 பில்லியன் டாலர்) இருந்தது.

அதே போல வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் (sovereign wealth funds), பென்ஷன் நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு மத்திய வங்கிகள் ஆகியவையும் இந்திய அரசின் பங்குகளில் முதலீடு செய்யலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதன்மூலம் இந்தியாவுக்குள் வரும் அன்னிய முதலீட்டை அதிகரிக்க மாபெரும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பிரணாப் முகர்ஜி மத்திய நிதியமைச்சர் பதவிலியிருந்து விலகி ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட உள்ள நிலையில் இந்த பெரும் நிதிச் சீர்திருத்த அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் அதிக வட்டிக்கு ரூபாயில் வாங்கும் கடன்களை அடைக்க வெளிநாடுகளில் இருந்து 10 பில்லியன் வரை டாலர்களில் கடனாக வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு பெரும் பலனைக் கொடுக்கும். இந்தியாவில் வாங்கப்படும் கடன்களுக்கு மிக அதிக வட்டியை வங்கிகள் வசூலித்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் கடன்களுக்கு வட்டி மிகக் குறைவாகவே உள்ளது.

இப்போது இந்தியாவில் அதிக வட்டிக்கு வாங்கியக் கடனை அடைக்க வெளிநாடுகளில் இருந்து குறைந்த வட்டிக்கு வாங்கும் கடனின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், இந்த நிறுவனங்கள் பெரும் நிம்மதிப் பெருமூச்சை விடவுள்ளன.

அதே போல உற்பத்தி மற்றும் அடிப்படைக் கட்டமைப்புத்துறையில் உள்ள இந்திய நிறுவனங்கள், அவர்களுக்கு வெளிநாட்டு வருமானமும் இருந்தால், இந்தியாவில் ரூபாயில் வாங்கிய கடனை அடைக்க, வெளிநாடுகளில் இருந்து ரூ. 50,000 டாலர் வரை கடன் வாங்கிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இன்னொரு முக்கியத் திருப்பமாக இந்திய அரசு நிறுவனங்களின் பங்குகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (foreign institutional investor-FII) ரூ. 1 லட்சம் கோடி வரை முதலீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 25,000 கோடி மட்டுமே முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தது.

அதே போல அதே போல வெளிநாட்டு நிதி நிறுவனங்கள், பென்ஷன் நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு மத்திய வங்கிகள் ஆகியவையும் இந்திய அரசின் பங்குகளில் ரூ. 1 லட்சம் கோடி வரை முதலீடு செய்யலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதன்மூலம் இந்தியாவுக்குள் வரும் டாலரின் அளவு அதிகரிக்கும். இதனால் டாலருக்கு உள்ள தட்டுப்பாடு விலகி, அதற்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவதும் கட்டுப்படுத்தப்படும்.

ரிசர்வ் வங்கி கவர்னர் சுபீர் கோகர்னுடன் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்திவிட்டு வந்த சிறிது நேரத்தில் இந்த அறிவிப்புகள் வெளியாயின. நாளை முகர்ஜி தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI announces steps to boost rupee, economy | வாங்கோ...வாங்கோ.. வெளிநாட்டு முதலீடுகளுக்கு 'கதவு- ஜன்னலை' திறந்துவிட்ட ரிசர்வ் வங்கி!

The Reserve Bank of India on Monday said it would allow companies to borrow more from overseas to pay back their high cost rupee loans. The central bank has also allowed new category of investors like sovereign wealth funds, pension funds, insurance funds and foreign central banks to buy Indian government bonds. External Commercial Borrowings limit has been lifted to $40bn from $ 30bn earlier. This would be to repay outstanding rupee loans of Indian businesses. This comes as a relief to the manufacturing sector. The rupee loans are expensive while foreign currency loans are cheaper. In addition, manufacturing and infrastructure companies -- as well as those that have foreign exchange earnings -- can now avail of ECBs of up to $ 10 billion to repay rupee loans invested in capex, or for fresh rupee capital expenditure.
 
Story first published: Monday, June 25, 2012, 15:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X