
கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் சுவிஸ் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை பாதுகாப்பதில் மும்முரம் காட்டிவருகின்றன. சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தைப் பதுக்கியுள்ள வெளிநாட்டினரின் விவரங்களை அளிக்குமாறு பல்வேறு நாடுகளும் சுவிஸ் வங்கிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. இதில் இருந்து தப்பிக்க புதிய வியூகங்களையும் சுவிஸ் வங்கிகள் செயல்படுத்தி வருகின்றன.
அதி முக்கிய வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பு உள்ள 1000 பிராங் நோட்டுகளை வாங்கி அதனை டெபாஸிட் செய்யுமாறு அவை கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், தங்கம், வைரம், கலைப்பொருள்கள், ஓவியங்கள் இவற்றில் முதலீடு செய்து அவற்றைப் பாதுகாக்க அவை வாடிக்கையாளருக்கு ரகசிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
சுவிஸ் நாட்டின் மத்திய வங்கி (சுவிஸ் தேசிய வங்கி) தரவுகளின் படி, 1000 பிராங் நோட்டுகள் சுவிஸ் நாட்டின் வங்கிப் பரிமாற்றங்களில் 60 விழுக்காடு இடத்தைப் பிடித்துள்ளது என்று தெரியவருகிறது. மேலும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது 50 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஒரு 1000 பிராங் நோட்டு நமது இந்திய ரூபாயில் 60 ஆயிரம் என்பதால், அதிக மதிப்பு கொண்ட ரூபாய்களை மிக எளிதில் குறைந்த இடத்தில் வைத்துப் பாதுகாக்க முடிகிறதாம். உலகின் மிக அதிக மதிப்பிலான பண நோட்டுகளை வைத்திருக்கும் 5 நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று. இங்கிலாந்து 50 பவுண்ட் (ரூ.4,300 மதிப்பு), மற்றும் அமெரிக்கா 100 டாலர் (ரூ.5,500 மதிப்பு) தான் தற்போது அதிக மதிப்பு கொண்ட ஒற்றை நோட்டாக உள்ளது.
முன்னர் அமெரிக்கா 500 டாலர், 1000 டாலர், 5000 டாலர், 10000 டாலர் நோட்டுகளை வெளியிட்டிருந்தது. ஆனால் 1945க்குப் பிறகு அவை வெளியிடப்படவில்லை. 1969-ம் ஆண்டுக்குப் பிறகு புழக்கத்தில் இருந்தே அவை முற்றாக நீக்கப்பட்டன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications