
கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் சுவிஸ் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை பாதுகாப்பதில் மும்முரம் காட்டிவருகின்றன. சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தைப் பதுக்கியுள்ள வெளிநாட்டினரின் விவரங்களை அளிக்குமாறு பல்வேறு நாடுகளும் சுவிஸ் வங்கிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. இதில் இருந்து தப்பிக்க புதிய வியூகங்களையும் சுவிஸ் வங்கிகள் செயல்படுத்தி வருகின்றன.
அதி முக்கிய வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பு உள்ள 1000 பிராங் நோட்டுகளை வாங்கி அதனை டெபாஸிட் செய்யுமாறு அவை கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், தங்கம், வைரம், கலைப்பொருள்கள், ஓவியங்கள் இவற்றில் முதலீடு செய்து அவற்றைப் பாதுகாக்க அவை வாடிக்கையாளருக்கு ரகசிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
சுவிஸ் நாட்டின் மத்திய வங்கி (சுவிஸ் தேசிய வங்கி) தரவுகளின் படி, 1000 பிராங் நோட்டுகள் சுவிஸ் நாட்டின் வங்கிப் பரிமாற்றங்களில் 60 விழுக்காடு இடத்தைப் பிடித்துள்ளது என்று தெரியவருகிறது. மேலும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது 50 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஒரு 1000 பிராங் நோட்டு நமது இந்திய ரூபாயில் 60 ஆயிரம் என்பதால், அதிக மதிப்பு கொண்ட ரூபாய்களை மிக எளிதில் குறைந்த இடத்தில் வைத்துப் பாதுகாக்க முடிகிறதாம். உலகின் மிக அதிக மதிப்பிலான பண நோட்டுகளை வைத்திருக்கும் 5 நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று. இங்கிலாந்து 50 பவுண்ட் (ரூ.4,300 மதிப்பு), மற்றும் அமெரிக்கா 100 டாலர் (ரூ.5,500 மதிப்பு) தான் தற்போது அதிக மதிப்பு கொண்ட ஒற்றை நோட்டாக உள்ளது.
முன்னர் அமெரிக்கா 500 டாலர், 1000 டாலர், 5000 டாலர், 10000 டாலர் நோட்டுகளை வெளியிட்டிருந்தது. ஆனால் 1945க்குப் பிறகு அவை வெளியிடப்படவில்லை. 1969-ம் ஆண்டுக்குப் பிறகு புழக்கத்தில் இருந்தே அவை முற்றாக நீக்கப்பட்டன.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications