கடனை வசூலிக்க மல்லையாவின் சொத்துக்களை ஏலம் விட வங்கிகள் முடிவு?

By Sutha
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடனை வசூலிக்க மல்லையாவின் சொத்துக்களை ஏலம் விட வங்கிகள் முடிவு?
பெங்களூர்: விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்களிடம் பெற்றுள்ள கடன் தொகையை வசூலிக்க விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான சில சொத்துக்களை ஏலம் விட வங்கிகள் முடிவு செய்துள்ளனவாம்.

கிங்பிஷர் நிறுவனத்திற்கு இதுவரை கொடுத்துள்ள கடனை வசூலிக்க களம் இறங்க வங்கிகள் முடிவு செய்து விட்டன. கடன் பாக்கிக்காக, விஜய் மல்லையாவின் சொத்துக்கள் சிலவற்றை ஏலத்திற்குக் கொண்டு வர அவர்கள் திட்டமிட்டுள்ளனராம்.

மும்பையில் உள்ள கிங்பிஷர் ஹவுஸ் மற்றும் கோவாவில் உள்ள விஜய் மல்லையாவின் பண்ணை வீடு அதில் சில.

ஸ்டேட் வங்கி தலைமையில் நடந்த கிங்பிஷருக்கு கடன் கொடுத்த வங்கிகளின் கூட்டுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சொத்து விற்பனை மூலம் ரூ. 135 கோடி கிடைக்கும் என வங்கிகள் தெரிவித்துள்ளன. மேலும் தனது செயல்பாடுகளை மேம்படுத்திக் கொள்வது குறித்த திட்டத்துடன் 15 நாட்களுக்குள் தங்களை அணுகுமாறும் மல்லையாவுக்கு வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.

ஆனால் சொத்துக்கள் விற்பனை குறித்த செய்திகளை கிங்பிஷர் நிறுவனம் மறுத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kingfisher crisis: Banks to sell Mallya's assets? | கடனை வசூலிக்க மல்லையாவின் சொத்துக்களை ஏலம் விட வங்கிகள் முடிவு?

In a major blow to the cash-strapped Kingfisher Airlines, banks on Thursday reportedly decided to launch their debt recovery process. Sources said that the bankers had decided to sell-off Kingfisher's non-core assets that include the Kingfisher House in Mumbai and a villa belonging to the airline's chief Vijay Mallya in Goa.
 
Story first published: Thursday, July 5, 2012, 15:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X