வரியில்லாத பத்திரங்களின் மூலம் பெறப்படும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டிய தேவையில்லை. மேலும் மற்ற வருவாய்களுக்கு வரி பிடித்தம் செய்யப்படும் போது, இந்த தொகை அதில் சேர்க்கப்படாது.
வரியில்லாத பத்திரங்கள் அரசு அங்கீகாரம் கொண்ட நிறுவனங்களின் மூலம் வழங்கப்படுகிறது. தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தை ஆகியவற்றில் வரியில்லாத பத்திரங்கள் வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்பட எளிய வழிகள் உள்ளன.
நீண்டகால மற்றும் 2ம் நிலை சந்தையில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு வரியில்லாத பத்திரங்கள் ஒரு பெரிய வரபிரசாதம் ஆகும். இதன்மூலம் கடந்த ஆண்டு முதலீட்டாளர்களுக்கு 8.20 முதல் 8.35 சதவீதம் வரியில்லாத கூப்பன்கள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த தொகை, முதலீட்டு நிறுவனத்தை பொறுத்து மாறுப்படும்.
வரி சேமிப்பு பத்திரங்களும், 80சிசிஎப் சட்டத்தின்படி வரி சலுகைகளை பெற உதவும் பத்திரங்களும் ஒன்றல்ல.