பறவைகளை 'சூ சூ' என விரட்ட விமானத்திலேயே கருவிகளைப் பொருத்த முடிவு!

பறவைகளை 'சூ சூ' என விரட்ட விமானத்திலேயே கருவிகளைப் பொருத்த முடிவு!
டெல்லி: பறவைத் தாக்குதலால் உலகம் முழுவதும் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், விமானங்களிலேயே பறவைகளைப் பயமுறுத்தும் வகையில் சாதனங்களைப் பொருத்துவது குறித்த ஆலோசனையில் விமானத் தயாரிப்பு நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

விமானங்களுக்கு பெரிய எதிரியே சாதாரண பறவைதான். பறவைகளைப் பார்த்துதான் மனிதன் விமானங்களைக் கண்டுபிடித்தான். ஆனால் இன்று இந்த பறவைகள்தான் வி்மானங்களின் பெரிய எதிரியாக மாறியுள்ளன. பறவைகள் மோதலால் விமானங்கள் பெருமளவில் சேதமடைகின்றன. இதனால் விமான நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கின்றன.

இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட தற்போது விமானங்களைத் தயாரிக்கும்போதே பறவைகளை விரட்டுவது தொடர்பான நவீன சாதனங்களையும் அதில் பொருத்துவது குறித்து விமான தயாரிப்பு நிறுவனங்கள் ஆலோசனையில் இறங்கியுள்ளன

இதுதொடர்பாக ஏர்பஸ் நிறுவனம் பர்டி என்று பெயரிடப்பட்டுள்ள Bird Impact Repellent and Deterrent sYstem (BIRDY) புதிய திட்டத்தை பரிசீலித்து வருகிறது. இந்த புதிய சாதனம் மூலம் அனைத்து வகை பறவைகளையும் விமானத்தை நெருங்க விடாமல் விரட்ட முடியும் என ஏர்பஸ் நம்புகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+