சுமார் 18 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து 100 கிலோ சர்க்கரை மூட்டை ரூ2950ஆக இருந்தது. இது தற்போது ரூ3,600 ஆக அதிகரித்திருக்கிறது. இதனால் 1 கிலோ சர்க்கரை ரூ31-ல் இருந்து ரூ38 ஆக உயர்ந்திருக்கிறது.
வடமாநிலங்களில் பருவமழை பொய்த்துவிட்டதால் பருப்பு விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
1 கிலோ கொண்டை கடலை பருப்பு ரூ60-ல் இருந்து ரூ72ஆகவும், துவரம் பருப்பு 1 கிலோ ரூ68-ல் இருந்து ரூ80 ஆகவும், தான்சானியா துவரம் பருப்பு 1கிலோ ரூ55 லிருந்து ரூ65 ஆக அதிகரித்துள்ளது. உளுந்தம்பருப்பின் விலை 1 கிலோ ரூ55-ல் இருந்து ரூ68 ஆகவும் பாசிப்பருப்பு 1 கிலோ ரூ65ல் இருந்து ரூ75 ஆகவும் இருக்கிறது.
இதேபோல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் வகைகளை பல நிறுவனங்கள் இருப்பு வைத்துள்ளதால் இதன் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. 1 கிலோ பாமாயில் ரூ65லிருந்து ரூ70 ஆகவும் சன்பிளவர் ஆயில் ரூ75-ல் இருந்து ரூ80 ஆகவும் நல்லெண்ணெய் ரூ140-ல் இருந்து ரூ150 ஆகவும் அதிகரித்துள்ளது.
ஆனால் பூண்டு விலை ரூ70-ல் இருந்து ரூ55 ஆக குறைந்துள்ளது. புளி, மிளகாய் வத்தல் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.