நியூயார்க்: பூமிப் பந்தில் 2030-ம் ஆண்டில் வறுமை என்பதே இல்லாமல் போய் மத்திய தர வர்க்கம் என்பது 2 பில்லியன் தொகை அதிகரித்துவிடும் என்கின்றனர் அமெரிக்க அறிவுஜீவிகள்.
அதாவது உலகளாவிய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இத்தகைய ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றனர். தற்போது ஒரு அமெரிக்க டாலருக்கும் குறைவாக ஒரு நாள் ஊதியம் பெறுவோர் எண்ணிக்கை 1 பில்லியன் எனில் இது இன்னும் 20 ஆண்டில் பகுதியாகக் குறைந்துவிடும் என்கிறார் அமெரிக்காவின் அறிவுஜீவியான கிறிஸ்டோபர் கோம். மத்திய தரக் குடும்பங்களின் தற்போதைய வளர்ச்சி நீடிக்குமானால் இது 2030-ம் ஆண்டில் 2 பில்லியனாக அதிகரிக்கும் என்பதும் இவரது கருத்து. அதாவது வறுமையில் இன்று உழல்வோர் விரைவில் மத்திய தர வர்க்கமாகிவிடுவராம்.
இதேபோல் வேறு என்ன ஊகங்களை வெளிப்படுத்தியிருக்கின்றனர்?
- சர்வதேச அளவிலான உணவுத் தேவை என்பது 50 விழுக்காடு அதிகரித்துவிடும்.
- உலக மக்கள் தொகையானது 7.1 முதல் 8.3 பில்லியனாக இருக்கும்.
- வறட்சியான பகுதியில் உலகின் 50 விழுக்காடு பேர் வசிக்க நேரிடும்.
- நகரங்களில் வசிப்போரின் எண்ணிக்கை 50 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக அதிகரித்துவிடும்.
- இந்தியா, வியட்நாம், இந்தோனேசியாவில் குறைந்த ஊதியத்துக்கு தொழிலாளர்கள் கிடைக்கும் நிலை மாறி சீனர்களின் ஆதிக்கம் அதிகரிக்க்குமாம்.
வறுமையே இல்லாத ஒரு உலகமும் உருவாவது எனில் நம்புறது அவ்வளவு எளிதானது அல்ல!