சென்னை: வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வது இன்றுடன் முடிவடைந்தது. கடைசிநாளில் இணையதளத்தில் அலைமோதிய கூட்டத்தால் பலமணிநேரம் வருமான வரித்துறை இணைய அலுவலகம் முடங்கிய நிலையில் இருந்தது.
இன்று கடைசிநாள் என்பதால் நெரிசலை தவிர்க்க சென்னை வருமானவரி அலுவலகத்தில் 40 சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது.. கடைசிநாள் என்பதால் ஆயிரக்கணக்கானோர் இன்று வருமான வரி அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்தனர். கடந்த ஆண்டு கடைசி 4 நாட்களில் மட்டும் சுமாராக 75000 பேர் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
மேலும் 10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் ஆன்லைனில்தான் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டதால் கடைசிநாளான இன்று ஆன்லைனில் அலைமோதிய கூட்டத்தால் வருமான வரித்துறையின் இணையதளம் பல மணிநேரம் முடங்கியே கிடந்தது.
Share This Article
English summary
Income tax department website crashes | இன்றுடன் முடிவடைந்தது வருமான வரி கணக்கு தாக்கல்
The volume of income-tax applications has increased after the department has made it mandatory for all those who earn over Rs 10 lakh per annum or own assets abroad to file their returns online, causing the department's website to crash intermittently as several assesees try to register before the due date.
Story first published: Tuesday, July 31, 2012, 19:01 [IST]
Other articles published on
Jul 31, 2012