மெக்கின்சே குளோபல் என்ற நிறுவனம் இதுதொடர்பாக ஒரு சர்வேயை நடத்தியுள்ளது. அதில்தான் இந்த விவரத்தைத் தெரிவித்துள்ளது. ஊழியர்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும்போது அவர்களின் உற்பத்தித் திறனை இந்த இமெயில்கல் கால்வாசி அளவுக்குக் காலி செய்து விடுகிறதாம்.
ஒரு நாளில் இரண்டரை மணி நேர அளவுக்கு மெயில்களைப் பார்ப்பது, அனுப்புவது, மெயில்களை அழிப்பது என செலவிடுகிறார்களாம் ஊழியர்கள்.
அலுவலகம் போவோர் ஒரு வருடத்திற்கு சராசரியாக 81 நாட்கள் கம்ப்யூட்டர்களிலேயே செலவிடுகிறார்களாம். கம்ப்யூட்டரில் உட்காரும்போது பெரும்பாலும் இமெயில்களுக்காகத்தான் உட்காருகிறார்களாம்.
இமெயில் பார்ப்பது, பேஸ்புக் பார்ப்பது, டிவிட்டருக்குப் போவது ஆகியவற்றை நிறுத்தி விட்டால், ஒரு ஊழியரால் அவரது உற்பத்தித் திறனை 25 சதவீத அளவுக்குக் கூட்ட முடியுமாம்.
ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்போர் முடிந்தவரை சக ஊழியர்களுடன் நேரிலேயே பேசுவதை ஊக்கப்படுத்த வேண்டும். மெயில் அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். அப்போதுதான் உற்பத்தித் திறனை கூட்ட முடியும் என்கிறது இந்த ஆய்வு முடிவு.
சாப்டப் போலாமா, தம் அடிக்கப் போறேன் வர்றியா, யோவ், என்னய்யா பண்றே .. இத்யாதி இத்யாதி விசாரிப்புகளையெல்லாம் இனிமேல் நேராகவே போய் சொல்லிட்டு செய்யுங்க.. கம்பெனிக்கு நல்லது!