மேலும் பணவீக்கமும் நல்லதுதான் என்றும் அவர் பேசியுள்ளதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
உ.பி. மாநிலம் பாரபங்கியில் செய்தியாளர்களிடம் பேசிய பேனி பிரசாத் வர்மா கூறுகையில், பெருகி வரும் விலைவாசியால் நான் வருத்தப்படவில்லை. மாறாக மகிழ்ச்சி அடைகிறேன். உணவுப் பொருட்களின் விலை உயர்வு விவசாயிகளுக்கு பலன் அளித்து வருகிறது. இதை நாம் மறந்து விடக் கூடாது.
மேலும் பணவீக்கமும் உயர்ந்து வருவது நல்லதுதான். இதனாலும் விவசாயிகள் பலனடைகிறார்கள். பருப்பு, கோதுமை, ரவை, காய்கறிகளின் விலை உயர்ந்தால் சந்தோஷம்தான். அது விவசாயிகளுக்கு நல்ல பலனையே தரும். எனவே பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு குறித்து நான் கவலைப்படவில்லை என்றார் பிரசாத்.
அவரது இந்தப் பேச்சுக்கு பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.