இன்றும், நாளையும் நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம்

வங்கித் துறை சீர்திருத்த மசோ, வங்கிகளை அவுட்சோர்சிங் செய்யும் முயற்சி ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய அளவில் வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இது தொடர்பாக தொழிலாளர் ஆணையத்தின் தலைவருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் கூறுகையில், எங்களது எதிர்ப்பை மீறி வங்கி சீர்திருத்த மசோதாவை மத்திய அரசு 22-ந் தேதி மக்களவையில் கொண்டு வர உள்ளது என்றார். இந்தப் போராட்டத்தில் மொத்தம் 9 தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.


Click it and Unblock the Notifications