மதுரை விமான நிலையமானது ரூ130 கோடியில் சர்வதேச தரத்துடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய ஓடுதளமும் 7,500 அடியாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மதுரையிலிருந்து கொழும்புக்கு விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இலங்கை அதிபர் ராஜபக்சவின் பெயரிலான மிகின் லங்கா நிறுவனம் செப்டம்பர் 8-ந் தேதி முதல் கொழும்பில் இருந்து மதுரைக்கு விமான சேவையை தொடங்க இருந்தது. ஆனால் அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 23 பயணிகளுடன் 2 சிறிய ரக மலேசிய விமானங்கள் மதுரை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. கோயில் நகரமான மதுரைக்கான விமான சேவை தங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று மலேசிய பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சன் குழுமத்தின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் செப்டம்பர் 20-ந் தேதியிலிருந்து இலங்கைக்கு விமான சேவையைத் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.