மதுரைக்கு வந்த 2 சர்வதேச விமானங்கள்! கொழும்புக்கு விமான சேவை தொடங்குகிறது!

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்ப மதுரையும் சர்வதேச விமான நிலையமாகிடுச்சு!
மதுரை: மதுரை விமான நிலையம் இப்பொழுது சர்வதேச விமான நிலையங்களின் பட்டியலில் இணைந்திருக்கிறது. மலேசியாவிலிருந்து 23 பயணிகளுடன் 2சிறிய ரக தனியார் விமானங்கள் நேற்று மதுரை விமான நிலையத்துக்கு வந்திறங்கின. இமிக்ரேஷன் சோதனையை எம்.பி. மாணிக்கம் தாகூர் தொடங்கி வைத்தார்.

மதுரை விமான நிலையமானது ரூ130 கோடியில் சர்வதேச தரத்துடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய ஓடுதளமும் 7,500 அடியாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மதுரையிலிருந்து கொழும்புக்கு விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இலங்கை அதிபர் ராஜபக்சவின் பெயரிலான மிகின் லங்கா நிறுவனம் செப்டம்பர் 8-ந் தேதி முதல் கொழும்பில் இருந்து மதுரைக்கு விமான சேவையை தொடங்க இருந்தது. ஆனால் அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 23 பயணிகளுடன் 2 சிறிய ரக மலேசிய விமானங்கள் மதுரை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. கோயில் நகரமான மதுரைக்கான விமான சேவை தங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று மலேசிய பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சன் குழுமத்தின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் செப்டம்பர் 20-ந் தேதியிலிருந்து இலங்கைக்கு விமான சேவையைத் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: மதுரை madurai
English summary

2 international flights greet Madurai | இப்ப மதுரையும் சர்வதேச விமான நிலையமாகிடுச்சு!

In a historic day of sorts for the Madurai airport, two chartered flights from Malaysia landed at the airport on Saturday afternoon, making them the first set of international aircrafts that landed in the temple city.
Story first published: Sunday, August 26, 2012, 13:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X