கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கம்ப்யூட்டர் விற்பனை 29 லட்சமாக உயர்ந்துள்ளது.
இது குறித்து கார்ட்னர் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், நிறுவனங்களும் கம்ப்யூட்டர்கள் விற்பனையை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த ஆண்டில் நான்காவது இடத்தில் இருந்த சீனாவின் லெனோவா நிறுவனம், நடப்பு ஆண்டில் முதல் காலாண்டில், மொத்த கம்ப்யூட்டர்கள் விற்பனையில் 16.6 சதவீததைப் பிடித்து முதலிடத்துக்கு வந்துள்ளது.
சர்வதேச அளவில் கம்ப்யூட்டர்கள் விற்பனையில் இந்த நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதே போல இந்தியாவில் மொத்த கம்ப்யூட்டர்கள் விற்பனையில் 13.4 சதவீதம் ஏசெர் நிறுவன கம்ப்யூட்டர்களே விற்கின்றன.
மூன்றாவது இடத்தில் உள்ள எச்.பி. நிறுவனத்தின் பங்களிப்பு 13.1 சதவீதமாக உள்ளது.
கடந்த ஆண்டின் ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் கம்ப்யூட்டர்கள் விற்பனையில் டெல் நிறுவனம் முதலிடத்தில் இருந்தது. அப்போது மொத்த கம்ப்யூட்டர்கள் விற்பனையில் இந்த நிறுவனத்தின் பங்களிப்பு 16.7 சதவீதமாக இருந்தது.
ஆனால், நடப்பு 2012 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் இந்நிறுவனம் இரண்டாவது இடத்திற்கு சென்றது. தற்போது 4வது இடத்தில் உள்ளது. கம்ப்யூட்டர்கள் விற்பனை சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்கு 12.9 சதவீதமாக உள்ளது.
இந் நிலையில் 2012ம் ஆண்டில் கம்ப்யூட்டர்கள் விற்பனை 8.4 சதவீதம் மட்டுமே உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் கல்லூரிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இலவச லேப்டாப்களை அரசு வழங்கி வருகிறது. இதனால் கூடுதலாக 9.20 லட்சம் கம்ப்யூட்டர்கள் விற்பனையாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.