நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வருங்கால வைப்பு நிதியாக செலுத்தப்பட்ட ரூ.119 கோடி கேட்பாரின்றி முடங்கிக் கிடக்கின்றது. எனவே உரிமை கோராத தொகைக்கு 3 ஆண்டுக்கு பிறகு வட்டி கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நெல்லை வருங்கால வைப்பு நிதி துணை மண்டல ஆணையர் ஸ்வரப்சாமி நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நெலலை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் பேருக்கு நெல்லை துணை மண்டல அலுவலகம் மூலம் பி.எப். தொகை செலுத்தப்பட்டு வருகிறது. 4,552 நிறுவனங்கள் பி.எப். தொகை செலுத்தி வருகின்றன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளின் பட்டியல்
மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. அதில பி.எப். தொகை செலுத்தாத பள்ளிகள் உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஊழியர்களுக்கு பி.எப். தொகை செலுத்தாத 10 நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இதுவரை 4 லட்சத்து 66 ஆயிரத்து 628 பி.எப். கணக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த கணக்குகளுக்கு யாரும் இதுவரை உரிமை கோரவில்லை. இந்த கணக்குகளில் செலுத்தப்பட்டு உரிமை கோரப்படாத தொகை மட்டும் ரூ.119 கோடியாகும்.
ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் அந்த பி.எப். தொகையை உரிமை கோராமல் விட்டு விடுகி்ன்றனர். அவ்வாறு கேட்கப்படாத தொகைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு வட்டி கிடையாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நெல்லை மண்டல பி.எப். அலுவலகம் மூலம் மட்டும் 80 பேருக்கு மாதாந்திர பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி விட்டு வேலையை விட்டவருக்கு பென்ஷன் வழங்கப்படும். பென்ஷன் பெற ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 30ம் தேதிக்குள் உயிர்வாழ் சான்றிதழ், மறுமணச் சான்றிதழை அளிக்க வேண்டும். ஆனால் பலர் ஜனவரி, பிப்ரவரி மாதம் வரை கூட சான்றிதழ்கள் அளிப்பதில்லை. அவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் தானாகவே பென்ஷன் நிறுத்தப்பட்டுவிடும் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications