நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வருங்கால வைப்பு நிதியாக செலுத்தப்பட்ட ரூ.119 கோடி கேட்பாரின்றி முடங்கிக் கிடக்கின்றது. எனவே உரிமை கோராத தொகைக்கு 3 ஆண்டுக்கு பிறகு வட்டி கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நெல்லை வருங்கால வைப்பு நிதி துணை மண்டல ஆணையர் ஸ்வரப்சாமி நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நெலலை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் பேருக்கு நெல்லை துணை மண்டல அலுவலகம் மூலம் பி.எப். தொகை செலுத்தப்பட்டு வருகிறது. 4,552 நிறுவனங்கள் பி.எப். தொகை செலுத்தி வருகின்றன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளின் பட்டியல்
மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. அதில பி.எப். தொகை செலுத்தாத பள்ளிகள் உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஊழியர்களுக்கு பி.எப். தொகை செலுத்தாத 10 நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இதுவரை 4 லட்சத்து 66 ஆயிரத்து 628 பி.எப். கணக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த கணக்குகளுக்கு யாரும் இதுவரை உரிமை கோரவில்லை. இந்த கணக்குகளில் செலுத்தப்பட்டு உரிமை கோரப்படாத தொகை மட்டும் ரூ.119 கோடியாகும்.
ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் அந்த பி.எப். தொகையை உரிமை கோராமல் விட்டு விடுகி்ன்றனர். அவ்வாறு கேட்கப்படாத தொகைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு வட்டி கிடையாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நெல்லை மண்டல பி.எப். அலுவலகம் மூலம் மட்டும் 80 பேருக்கு மாதாந்திர பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி விட்டு வேலையை விட்டவருக்கு பென்ஷன் வழங்கப்படும். பென்ஷன் பெற ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 30ம் தேதிக்குள் உயிர்வாழ் சான்றிதழ், மறுமணச் சான்றிதழை அளிக்க வேண்டும். ஆனால் பலர் ஜனவரி, பிப்ரவரி மாதம் வரை கூட சான்றிதழ்கள் அளிப்பதில்லை. அவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் தானாகவே பென்ஷன் நிறுத்தப்பட்டுவிடும் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications