மும்பை: இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 28.23 கோடி டாலராக உயர்ந்து 29,046 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் 24-ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 29,018 கோடி டாலராக இருந்தது. அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பானது டாலரின் வெளிமதிப்பில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுக்கேற்ப மாற்றம் அடைகிறது. இதே காலத்தில் டாலருக்கு எதிராக பாரத ரிசர்வ் வங்கியின் கைவசம் இதர செலாவணிகளின் கையிருப்பு ரூ25, 762 கோடி டாலராக இருந்தது.
கையிருப்பு தங்கத்தின் மதிப்பு திடீரென அதிகரித்து 2,624 கோடி டாலராக உயர்ந்தது. இதுவே அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பு உயரவும் காரணமாக இருக்கிறது.
பன்னாட்டு நிதியத்திடம் உள்ள இருப்பு நிதி 2.20 கோடி டாலர் குறைந்து 220.90 கோடி டாலராக உள்ளது.